ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கொண்டு வரும் ஒன்றிய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் மாநகர குழு சார்பில் செம்மண்டலம் செயற்பொறியாளர் அலுவலகத்தில் மனு கொடுத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநகர செயலாளர் ஆர்.அமர்நாத் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் கோ. மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.சுப்புராயன் மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.கே.பக்கிரான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.