நியூஸ் கிளிக் மற்றும் ஊடகங்கள் மீது பாஜக அரசு நடத்தும் அடாவடித்தனத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருவண்ணாமலையில் மாவட்டச் செயலாளர் எம். சிவக்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ். ராமதாஸ், பி. செல்வம், கே. வாசுகி, என். சேகரன், ஏ. லட்சுமணன், எம். பிரகலாதன், எம். வீரபத்திரன், திராவிட கழகம் மாவட்டத் தலைவர் சி. மூர்த்தி, மனிதநேய மக்கள் கட்சி மாவட்டத் தலைவர் ஏ. ஆர். நாசர் உசேன், தலித் விடுதலை இயக்கம் தலித் நதியா, தமிழக வாழ்வுரிமைக் கட்சி சாமி சம்பத், பத்திரிகையாளர் பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.