திருவள்ளூர், நவ.10- கருப்பு தீபாவளியாக மாற்றிய அரசு போக்கு வரத்து துறையை கண்டித்து தமிழ்நாடு போக்குவரத்து கழக ஓய்வுபெற்றோர் நல அமைப்பின் சார்பில் திருவள்ளூர் பணிமனை முன்பு வெள்ளியன்று (நவ 10) ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. தீபாவளிக்கு முன்னதாக டி.ஏ. வழங்கப்படும் என போக்குவரத்துத் துறை செயலாளர் கொடுத்த வாக்குறுதியை நிறை வேற்றாததை கண்டித்தும், 2022 டிசம்பர் முதல் 2023 அக்டோபர் வரை பணி ஓய்வு, விருப்ப ஓய்வு, பணி யின் போது இறந்த தொழி லாளர்கள் ஆகியோருக்கு வழங்க வேண்டிய பண ப்பலன்களை வழங்காததை கண்டித்து இந்த போராட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க கிளைத் தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மண்டல செயலாளர் எம்.ராஜசே கரன், அரசு அனைத்து துறை ஓய்வூதியர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஜி.இளங்கோவன், கிளை நிர்வாகிகள் என்.சங்கர், ஆர்.குப்பன், ராமச்சந்திரன் ஆகி யோர் பேசினர்.