districts

img

பணி ஓய்வு பெற்ற பிறகு தொழிலாளர்களுக்கு நிர்வாகம் பிடித்தம் செய்த பணத்தை திரும்ப வழங்காமல் உள்ளது

மாநகர போக்குவரத்து கழகம் தொழிலாளர்களிடம் இருந்து சேமநல நிதி மற்றும் ஐஆர்டி கல்வி நிறுவனங்களுக்கு பிடித்தம் செய்தது. பணி ஓய்வு பெற்ற பிறகு தொழிலாளர்களுக்கு நிர்வாகம் பிடித்தம் செய்த பணத்தை திரும்ப வழங்காமல் உள்ளது. எனவே, அவற்றை வழங்க கோரி செவ்வாயன்று (ஜூலை 18) மாநகர போக்குவரத்து கழக தலைமையகமான பல்லவன் இல்லம் முன்பு ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழ்நாடு  அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் மாநகர கிளை தலைவர் டி.குருசாமி தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், மாநில பொருளாளர் வரதராஜன், கிளையின் பொதுச் செயலாளர் கே.வீரராகவன், பொருளாளர் எஸ்.ஆதிமூலம் உள்ளிட்டோர் பேசினர்.