மாணவி ஸ்ரீமதி மரணத்திற்கு நீதி வேண்டும், மற்றும் மாதர் சங்கத்தின் நிர்வாகிகளை கைது செய்ததை கண்டித்தும் (நவ 24) பெரியபாளையத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட தலைவர் எஸ்.கலை யரசன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் இந்திய மாணவர் சங்கத்தினர் உட்பட்ட பலர் கலந்து கொண்டனர்.