அவமானப்படுத்திய பாஜக வேட்பாளர்: வெளிநடப்பு செய்த அமமுக
சிதம்பரம், ஏப். 1- சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் கார்த்தியாயினி போட்டியிடுகிறார். சிதம்பரத்தில் வேட்பாளர் அறிமுககூட்டத்தில் கூட்டணி கட்சியான அம்மா மக்கள் முன்னேற்றக் கழக கடலூர் மாவட்ட செய லாளர் மோகன் கார்தியா யினி அருகில் அமர்ந்தி ருந்தார். அப்போது கூட்டத்திற்கு அதிகமான நபரை கூட்டி வரவில்லை என கூறி மோகனை அலட்சியப்படுத்தி வேறு இடத்தில் உட்காருங்கள் என்று வேட்பாளர் கூறிய தாகவும் பாமகவினரை உயர்த்தி பேசியதாகவும் கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த அமமுக பிரமுகர் மோகன் தனது கட்சியினருடன் அந்த இடத்தில் இருந்து வெளி யேறினார். இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்ட போது பிரதான கட்சியில் மாவட்ட செய லாளரான என்னை அலட்சிப்படுத்தும் விதமாக வேட்பாளர் கூறியது வேதனையளிக்கிறது. இதனால் தேனியில் கட்சி யின் தலைவர் டிடிவி தின கரனுக்கு தேர்தல் பணி யாற்ற அங்கே செல்ல உள்ள தாக கூறினார்.
ஐசிஎப் 2,829 ரயில் பெட்டிகள் தயாரித்து சாதனை
சென்னை, ஏப். 1- ஐசிஎப் கடந்த ஆண்டு 2,829 ரயில் பெட்டிகள் தயாரித்து சாதனை படைத்துள்ளது. கடந்த 2022 -2023ஆம் ஆண்டு 2,072 ரயில் பெட்டி கள் தயாரிக்கப்பட்ட நிலை யில், கடந்த தயாரிப்பு ஆண்டில் (2023 - 24) ஐசிஎப் 2,829 ரயில் பெட்டிகளை தயாரித்துள்ளது. இந்த எண்ணிக்கையில் 1,091 வந்தே பாரத் ரயில் பெட்டி கள், மின்தொடர் ரயில் பெட்டிகள், நெடுந் தொலைவு மின்தொடர் ரயில் பெட்டிகள் போன்ற வை அடங்கும். 1,738 இதர எல்.எச்.பி வகை ரயில் பெட்டிகளும் கடந்த ஆண்டில் தயாரிக்கப் பட்டுள்ளன. சாதாரண எல்.எச்.பி.ரயில் பெட்டிகளின் தயாரிப்புடன் ஒப்பிடும் போது தானியங்கி ரயில் பெட்டிகள் தயாரிக்கும் நேரம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சாதனையை செய்த ஊழி யர் மற்றும் அதிகாரிகளை ஐசிஎப் பொது மேலாளர் யு.சுப்பாராவ் திங்களன்று (ஏப்.1) பாராட்டி இனிப்பு வழங்கினார்.
சென்னையில் கண் நோய் பாதிப்பு
சென்னை,ஏப்.1- கோடை காலம் தொடங் கியதையடுத்து கண் நோய் கள் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து கண் மருத்துவர்கள் சில ஆலோ சனைகளை கூறியுள்ளனர். அவைவருமாறு, வெயில்காலத்தில், உலர்விழி, கண் அழற்சி, புறஊதா கதிர்வீச்சு பாதிப்பு, ஒவ்வாமை பாதிப்பு ஆகியவை அதிக அளவில் ஏற்படுகின்றன. கண்களில் போதிய ஈரத்தை தக்க வைப்பதற்கான கண்ணீர் சுரக்காதபோது உலர் விழி பிரச்சனை ஏற்படுகிறது. தற்போது இளம் சிவப்பு கண் நோய் எனப்படும் கண் அழற்சி பாதிப்புகள் அதி கரித்து வருகிறது. கண் இமைக்கு உள்ளே அமைந் திருக்கும் திசுவில் வீக்கம் அல்லது அழற்சி ஏற்படும் போது இத்தகைய பாதிப்பு உருவாகிறது. இதனால் அசுத்தமான கைகளால் கண்களை தொடக்கூடாது. சூரியனிலிருந்து வரும் புறஊதா கதிர்வீச்சு பல கண் நோய்களை விளை விக்கும். இத்தகைய பாதிப்பைத் தவிர்க்க சூரிய ஒளியிலிருந்து கண்களைக் காக்கும் கண்ணாடிகளை அணியலாம். கோடை காலத் தில் உடலில் நீர்ச்சத்தை குறையாமல் பாதுகாக்கும் இயற்கை பானங்களை அருந்த வேண்டும். செல் போன்கள், கம்ப்யூட்டர் திரைகளை தொடர்ந்து பார்ப்பதை தவிர்க்க வேண்டும் என்றனர்.
மெட்ரோ ரயிலில் 87 லட்சம் பேர் பயணம்
சென்னை,ஏப்.1- மெட்ரோ ரயிலில் மார்ச் மாதத்தில் 86 லட்சத்து 82 ஆயிரத்து 457 பேர் பயணம் செய்துள்ளனர். இதுபோல ஜனவரி மாதத்தில் 84 லட்சத்து 63 ஆயிரம் பேரும், பிப்ரவரியில் 86 லட்சத்து 15 ஆயிரம் பேரும் பயணம் செய்தனர். பிப்ரவரி மாதத்தை விட மார்ச் மாதத்தில் அதிகமாக பயணித்துள்ளனர். அதிக பட்சமாக கடந்த மாதம் 4-ந்தேதி ஒரே நாளில் மட்டும் 3 லட்சத்து 34 ஆயிரத்து 710 பேர் பயணம் செய்துள்ள னர் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஆங்கில மொழி தேர்வு
சென்னை, ஏப்.1- ஆங்கில மொழி தேர்வு களை நடத்தும் ஆக்ஸ் போர்டு ஆங்கில மொழி நிலை தேர்வு மையம், மாணவர்களை மையப் படுத்தி ‘உங்களை பற்றி’ என்னும் புதிய விளம்ப ரத்தை அறிமுகம் செய்துள் ளது. மொழிசார்ந்த தீர்வு களுக்கு சரியான பயிற்சி நிறுவனத்தை தேர்ந்தெடுப் பதன் மூலம் மாணவர் களின் எதிர்காலம் சிறப் பானதாக இருக்கும் என்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆஙகிலம் குறித்த துல்லியமான பாடத்திட்டங் கள் அதனால் மாண வர்கள் அடையும் பலன்கள் ஆகியவை குறித்து விரிவாக இந்த விளம்பரத்தில் கூறப்பட்டுள்ளது என்று ஆக்ஸ்போர்டு சர்வதேச கல்வி குழுமத்தின் தெற் காசியாவிற்கான பிராந்திய இயக்குநர் அமித் உபாத்யாய் தெரி வித்துள்ளார். தேர்வுகள் பற்றிய கூடுதல் விவரங் களுக்கு, மாணவர்கள் OELLT India - English Language Tests | Oxford International Digital Institute (oxfordellt.com) ஐ பார்வையிடலாம்.