சிதம்பரம், அக்.14- சிதம்பரம் அருகே உள்ள கொத்தங்குடி ஊராட்சிக்குட்பட்ட கதிர்வேல், தில்லையம்மன், அண்ணாமலை நகர் மற்றும் சிதம்பரம் நகரையொட்டிய பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட மலைக்குறவர் இன மக்கள் பல ஆண்டு காலமாக வசித்து வரு கிறார்கள். தங்களைப்போன்று குழந்தைகளும் முறம், கூடை பின்னி தெருத் தெருவாக எடுத்துச் செல்லும் நிலை தொடரக்கூடாது என்பதால் அரசுப் பள்ளிகளில் சேர்த்துள்ளனர். சாதிச் சான்று வழங்காமல் அதி காரிகள் இழுத்தடிப்பு செய்து வருவதால் பள்ளிப் படிப்பை தொடர முடியவில்லை. இது குறித்து அந்தப் பகுதியில் வசிக்கும் தேவி கூறுகையில்,“. எங்களது குழந்தைகளின் கல்விக்காக எஸ்டி சாதிச் சான்று கேட்டு சிதம்பரம் வட்டாட்சியர், வருவாய் கோட்டாட்சியர் அலுவலங்களுக்கு பல ஆண்டுகாலமாக சென்று வருகிறோம். ஆனாலும், அதிகாரிகள் கண்டுக்கொள்வதே இல்லை. எனவே, எங்களது முன்னோர், ரத்த உறவு முறையினர் வைத்திருக்கும் சாதிச் சான்றை அடிப்படையாகக் கொண்டு மலைக்குறவர் இன மக்களுக்கு எஸ்டி சாதி சான்று வழங்க முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார் பிள்ளைகளின் கல்விகாக கடந்த பல ஆண்டுகளுக்கு மேலாக சாதி சான்றிதழ் கேட்டு சிதம்பரம் வட்டாட்சியர் மற்றும் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று பல முறை மனுக்கள் கொடுக்கப்பட்டதாகவும் இதற்கு இதுவரை சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என கூறுகின்றனர்.