திருவள்ளூர், பிப் 10- திருவள்ளூர், பொன்னேரி வட்டங்களில் பழங்குடி இன மக்க ளுக்கு குடிமனை பட்டாகள் வழங்கப் படும் என வட்டாட்சியர்கள் உறுதி யளித்ததால் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் மேற்கொள்ள இருந்த காத்திருக்கும் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் வட்டம், பாக்குப் பேட்டை, குமரசேரி,வாசனாம்பட்டு, மப்பேடு, வயலூர், குப்பத்து பாளையம், திருப்பாச்சூர், வசந்தம் நகர், ஆகிய பழங்குடி மக்களின் குடிசை களுக்கு பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் பிப் 8 அன்று திருவள்ளூர் வட்டாட்சியர் அலு வலகத்தில் காத்திருக்கும் போராட்டம் நடைபெறும் என அறிவித்தனர். கடந்த ஆண்டு நவம்பரில் திரு வள்ளூர் வட்டாட்சியர் மற்றும் திரு வள்ளூர் கோட்டாட்சியர் அலு வலகத்தில் நடைபெற்ற போராட்டத்தின் போது நடைபெற்ற பேச்சுவார்த்தையில், பட்டா கோரிக்கைகளை 15 தினங்களுக்குள் முடித்து விடுவோம் என்று கூறி ஒரு நபருக்கு மட்டும் குடிமனை பட்டாவை அதிகாரிகள் வழங்கினர். ஆனால் 3 மாதங்கள் கடந்த பின்ன ரும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள வில்லை. இந்த நிலையில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் பிப் 8 அன்று திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருக்கும் போராட்டம் நடை பெறும் என அறிவிக்கப்பட்டது. பின்னர் அதிகாரிகள் நடத்திய பேச்சு வார்த்தையில் சிலருக்கு பட்டா வழங்கினர். மற்றவர்களுக்கு படிப்படி யாக பட்டா வழங்கப்படும் என உறுதி அளித்தனர். பொன்னேரி போராட்டம் பொன்னேரி வட்டத்திற்கு உட்பட்ட சிறுனியம் அருகில் உள்ள பன்னீர்வாக்கத்தில் பல ஆண்டு காலமாக வாழும் வேட்டைக்காரன் இன மக்கள் பட்டா கேட்டு போராடி வருகின்றனர். இந்நிலையில் பிப் 13 அன்று பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருக்கும் போராட்டம் நடைபெறும் என அறி வித்தனர். இதனை அறிந்த வட்டாச்சி யர் மதிவாணன் பிப் 9 அன்று சங்க தலைவர்களை அழைத்து பேசினார். 65 நபர்களுக்கு பட்டா தயாராக உள்ளது விரைவில் வழங்கப்படும் என தெரிவித்ததால் அந்த போராட்ட மும் ஒத்திவைக்கப்பட்டது. இதனை பழங்குடி மக்கள் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.தமிழ்அரசு தெரிவித்துள்ளார். முன்ன தாக பேச்சுவார்த்தையில் மாநில துணைத் தலைவர் இ.கங்காதரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஜி.சம்பத், மலைவாழ் மக்கள் சங்கத்தின் நிர்வாகிகள் அற்புதம், வேட்டைக்காரன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட தலைவர் டில்லி, மாவட்டச் செயலாளர் ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.