districts

img

துறைமுகம்-மதுரவாயல் பறக்கும் சாலை பணிகளை அடுத்தமாதம் துவங்க ஏற்பாடு

சென்னை,செப்.24- சென்னை துறைமுகம்-மதுரவாயல் பறக்கும் சாலை ரூ.3,570 கோடி செலவில் உருவாகிறது. சென்னை துறைமுகம்-மதுரவாயல் இடையே பறக்கும் சாலை அமைக்க கடந்த 2009-ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. அதன் பிறகு அதிமுக அரசு  சுற்றுச்சுழல் பிரச்சினை களை காட்டி இந்த திட்டத்தை  நிறுத்தியது. இந்நிலையில் தற்போது திமுக அரசு  அமைந்த பிறகு இந்த திட்டம் மீண்டும் துவக்கப் பட்டது.இந்த சாலை 21 கி.மீ.  தூரத்துக்கு 2 அடுக்கு களுடன் பிரமாண்டமாக உருவாக்கப்பட உள்ளது. இதற்கான கட்டுமான பணி களும் அடுத்த மாதம் தொடங்க உள்ளது. இந்த பறக்கும் சாலையின் கட்டு மான பணிகளை மேற் கொள்ள மும்பையை சேர்ந்த  ஜெ.குமார் இன்ப்ரா நிறுவ னம் ஒப்பந்தம் பெற்றுள் ளது.  இந்த பறக்கும் சாலை  பணிகளை இரண்டரை வருடத்தில் முடிக்க காலக் கெடு நிர்ணயிக்கப் பட்டுள்ளது. இந்த பறக்கும் சாலை நேப்பியர் பாலம் முதல் கோயம்பேடு வரை 2 அடுக்கு கொண்டதாக இருக்கும். இதில் முதல் அடுக்கு பறக்கும் சாலை கோயம்பேடு- துறைமுகம் இடையே உள்ளூர் வாகனங்கள் செல்ல வசதியாக இருக்கும். இதில் 7 இடங்களில் நுழைவு பாதையும், 6 இடங்களில் வெளியேறும் பாதையும் அமைக்கப்படுகிறது. 2-வது அடுக்கு மூலம் துறை முகத்துக்கு செல்லும் கனரக வாகனங்கள் எளிதாக  செல்லலாம். இந்த பறக்கும் சாலை நேப்பியர் பாலத்தில் இருந்து கோயம்பேடு வரை கூவம் ஆறு வழியாகவும், கோயம்பேட்டில் இருந்து மதுரவாயல் வரை சென்னை -பெங்களூர் நெடுஞ்சாலை யிலும் அமைகிறது. துறை முகத்துக்கு உள்ளேயும், வெளியேயும் சரக்குகளை விரைவில் கொண்டு செல்ல  இந்த பறக்கும் சாலை திட்டம் உதவும்.