சென்னை, செப். 13 - மாவட்டந்தோறும் புகைப்படக் கண்காட்சி நடத்த தமிழக அரசு துணை நிற்கும் என்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச் சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். தமிழ்நாடு பத்திரிகை புகைப்பட கலைஞர்கள் சங்கத்தின் புதிய அலுவல கத்தை புதனன்று (செப்.13) சென்னை சூளையில் அமைச்சர் உதயநிதி ஸ்டா லின், மார்க்சிஸ்ட் கம்யூனி ஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகி யோர் திறந்து வைத்தனர். இதனை தொடர்ந்து புகைப்பட கலைஞர்களுக்கு கேமரா பேக்குகளை வழங்கி பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் சேகர்பாபு வின் பணிகளை முதலமைச் சரும், தமிழகமும் பாராட்டிக் கொண்டிருக்கும் நிலையில், ஒரு கூட்டம் அவரை ராஜினாமா செய்யச் சொல்லி சுற்றிக் கொண்டி ருக்கிறது. கலைஞரால் 2006ம் ஆண்டு தொடங்கப் பட்ட சங்கம் 18வது ஆண்டை கண்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பத்திரிகை களில் செய்திகளை விட புகைப்படங்களுக்கு முக்கியத்துவம் இருக்கும். நீங்கள் நடத்திய புகைப் படக் கண்காட்சியை மாவட்டந்தோறும் நடத்த பரிசீலிக்க வேண்டும். அதற்கு முதலமைச்சரும், அரசும் துணையாக நிற்கும். புகைப்படக் கலைஞர்க ளின் கோரிக்கையை முதல மைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று முடிந்த வரை முடித்து தருகிறேன். இந்த அலுவலகத்தை விட பெரிய அலுவலகத்தை அரசு சார்பில் அமைத்து தர நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
ஜி.ராமகிருஷ்ணன்
“ஊடகச் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் போன்ற வற்றை ஒன்றிய அரசு பறித்து வரும் மோசமான சூழல் நிலவுகிறது. ஊடகம் என்பது ஜனநாயகத்தின் நான்காவது தூண். நிர்வாகம், நாடாளுமன்றம், நீதித் துறையையும் தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு, அரசின் தவறு களை சுட்டிக் காட்டக் கூடிய ஊடகத்துறையை ஒன்றிய அரசு அச்சுறுத்தி வருகிறது; விமர்சிக்கும் ஊடகங்களின் குரல்வளையை நெறிக்கி றது” என்றார். “1948 ஜனவரி 30ந் தேதி அண்ணல் காந்தியடிகள் கோட்சே கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்டார். அன் றைய தினம் சங்பரிவார் கும்பல், காந்தியை கொன்றது இஸ்லாமியன் என்று வதந்தியை பரப்பி யது. அப்போது, அன்றைய பிரதமர் நேரு, காந்தியை கொன்றது ஒரு இந்து என்று குறிப்பிட்டு, பிரெஞ்ச் புகைப்பட கலைஞர் எடுத்த படத்தை காட்டினார். அந்தப் படம் உலக வரலாற்றில் இடம் பெற்றுள்ளது” என்று புகைப்படக் கலைஞர்களின் அருமையை புகழ்ந்துரைத் தார். புகைப்படக் கலைஞர் கள், பத்திரிகையாளர்களின் உரிமைகளை, நலனை பாதுகாக்க மார்க்சிஸ்ட் கட்சி என்றென்றும் துணை நிற்கும் என்றும் ராம கிருஷ்ணன் கூறினார். இந்நிகழ்ச்சியில் அற நிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, ஐ.பரந்தா மன் எம்எல்ஏ, பத்திரிகை யாளர் நக்கீரன் கோபால், பெருநகர சென்னை மாநக ராட்சி ஆணையர் ஜெ.ராதா கிருஷ்ணன், சங்கத்தின் தலைவர் ஜோதிராமலிங் கம், பொதுச்செயலாளர் சீனிவாசன், பொருளாளர் அரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்