திருவள்ளூர்,அக்.9- திருக்கண்டலம் கிராத்தை சேர்ந்த உமாச்சந்திரன் சமீபத்தில் மூளைச்சாவு அடைந்தார். அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது குடும்பத்தினர் முன்வந்தனர். இதையடுத்து அவரது உடல் உறுப்புகள் தானம்செய்யப்பட்ட தையடுத்து ஞாயிறன்று (அக் 8) அவரது உடலுக்கு மாவட்ட ஆட்சி யர் ஆல்பி ஜான் வர்கீஸ் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இதில் காவல்துறை ஊத்துக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளர் கணேஷ் குமார், ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் வசந்தி, பெரியபாளையம் காவல் ஆய்வாளர் வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.