சென்னை, ஆக. 16-
மீன் பிடிக்க விதிக்கப் பட்ட தடையை நீக்கியதற் காக தமிழ்நாடு முதல மைச்சருக்கு சென்னை செங்கை மீன்பிடி தொழிற் சங்கம் நன்றி தெரிவித் துள்ளது.
இதுகுறித்து சங்கத்தின் பொதுச்செயலாளர் இரா.லோகநாதன் வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சென்னை கோட்டையில் சுதந்திர தின கொடியேற்று விழாவையொட்டி முதல்வ ரின் பாதுகாப்பிற்காக ஆகஸ்ட் 15ஆம் தேதி கடலில் மீன்பிடிக்க தடை விதித்து மீன் துறை சார்பில் உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவை திரும்ப பெற வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச் சருக்கு சங்கத்தின் சார்பில் கோரிக்கை வைத்தோம்.
அதனை ஏற்று மீன் துறை அறிவித்த தடை உத்தரவு திரும்ப பெறப்பட்டது. இதற்காக தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.