மாற்றுத்திறனாளிகளுக்கு எதிராக செயல்படும் ஒன்றிய அரசுக்கு எதிராக மக்கள் மன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் நிகழ்வு வியாழனன்று (டிச.1) தமிழகம் முழுவதும் நடைபெற்றது. தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் இந்த நிகழ்வு நடைபெற்றது. இதன் ஒருபகுதியாக மத்தியசென்னை மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு மாவட்டத் தலைவர் சுரேந்திரன் தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் கே.ஆர்.சக்ரவர்த்தி, மாநில துணைத்தலைவர் எஸ்.கே.மாரியப்பன், மாவட்டச் செயலாளர் எஸ்.மனோன்மணி, பொருளாளர் என்.மனோகரன் மற்றும் சக்திவேல், விஜய், வெ.ரவீந்திரபாரதி, சிவக்குமார் உள்ளிட்டோர் பேசினர்.