districts

img

ராணிப்பேட்டையில் மாரத்தான் ஓட்டம் மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்

ராணிப்பேட்டை, அக். 07 -  இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சனிக்கிழமை (அக். 07) அன்று பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு ராணிப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் இருந்து அறிஞர் அண்ணா மாரத்தான் ஓட்டப் பந்தயத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் ச. வளர்மதி கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அலுவலர் ஞானசேகரன், துணை காவல் கண்காணிப்பாளர் பிரபு, உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் 17 வயது முதல் 25 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் பிரிவுக்கு 8 கி.மீ. பெண்கள் பிரிவிற்கு 5 கி.மீ. 25 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் பிரிவுக்கு 10 கி.மீ, பெண்கள் பிரிவிற்கு 5 கி.மீ என தனித்தனியே நடத்தப்பட்டது.  300 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள், இளைஞர்கள், மகளிர்கள் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற அனைத்து தரப்பினருக்கும் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.