districts

img

பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் மாவட்ட ஆட்சியர் உறுதி

கிருஷ்ணகிரி, பிப். 5- 50 ஆண்டுகளாக பட்டா கிடைக்காமல் அவதிப்பட்டு வரும் ஏழை எளிய மக்களுக்கு பட்டா கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக கிருஷ்ணகிரி மாவட்டஆட்சியர் உறுதியளித்தார். ஊத்தங்கரை வட்டம், காட்டேரி ஊராட்சிக்கு உட்பட்ட அனுமன்தீர்த்தம் கிராமத்தில் 420க்கும் மேற்பட்ட வீடுகளில் 500க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்குள்ள 150 வீடுகளுக்கு 50 ஆண்டுகள் கடந்தும் பட்டா வழங்கப்படாத நிலை உள்ளது. பட்டா கேட்டு அரசு அதிகாரிகளிடம், மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்க வில்லை. மேலும் 2 தலைமுறைக்கு முன்பு தோப்பு புறம்போக்கில் வீடு கட்டி குடியிருக்கும் 75க்கும் மேற்பட்ட வீடு களுக்கும் பட்டா வழங்கப்படவில்லை. அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட ஒன்றியக் கவுன்சிலர் கோவிந்தசாமி தலைமையில் பட்டா கேட்டு பலமுறை போராட்டங்கள் நடத்தி மனு அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டு களில் பட்டா வழங்குவதற்காக அரசு அலுவலர்கள் 5 முறை இந்த பகுதியை அளவீடு செய்துள்ளனர். ஆனாலும் பட்டா வழங்கப்படவில்லை. கடந்த 2022ஆம் ஆண்டு ஊத்தங்கரை ஜமாபந்தியில் பட்டா கேட்டு மனு அளித்ததன் பேரில், வட்டாட்சியர் திரு மலை ராஜ் தலைமையில் நிலத்தை அள வீடு செய்து பயனாளிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டது. ஆனால் இந்த நிலத்தின் வகை மாற்றத்திற்கு கிராம நிர்வாக அலுவலரும், வருவாய் அலுவலரும், வட்ட அளவையரும் ஏற்கெனவே அரசு அதி காரிகள் கூறியபடி நிலத்தை வகை மாற்றம் செய்ய ஒத்துழைக்காமல் இழுத்தடித்து வருகின்றனர். இந்நிலையில் திங்களன்று ஒன்றிய கவுன்சிலர் கோவிந்தசாமி தலைமையில் பாதிக்கப்பட்ட மக்கள் மாவட்ட ஆட்சி யரிடம் மனு அளித்தனர். அதில் நிலத்தை உடனடியாக வகை மாற்றம் செய்து கலைஞரின் நுாற்றாண்டு விழாவையொட்டி இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் திட்டத்தில் பட்டா வழங்க வேண்டும், அரசின் கணக்கில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். உடனடியாக பட்டா கிடைக்க நட வடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் ம.சரயு உறுதி அளித்ததுடன், நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட வருவாய் அலுவல ருக்கும் அறிவுரை வழங்கினார்.