ஒன்றிய பாஜக அரசின் மதநல்லிணக்கத்திற்கு எதிரான கொள்கைகளை கண்டித்து ஓசூரில் மார்க்சிஸ்ட் கட்சி மாநகரச் செயலாளர் சி.பி.ஜெயராமன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. செயற்குழு உறுப்பினர்கள் கோவிந்தசாமி,ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி, ஒன்றிய செயலாளர் ராஜாரெட்டி, ஒன்றிய,வட்ட செயலாளர்கள் சூளகிரி முனியப்பா, தளி வெங்கடேஷ், கெலமங்கலம் ராஜா,மாவட்ட குழு உறுப்பினர்கள் நாராயணமூர்த்தி,ஸ்ரீதர் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.