districts

img

போராட்டத்தால் சாலைப்பணியை துவக்கிய ஒப்பந்ததாரர்

சென்னை, பிப். 20- சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டலம் 4ஆவது வார்டில் 42 தெருக்களில் தார் சாலை மற்றும் பேவர் பிளாக் சாலை கள் அமைக்க கடந்த அக்டோபர் மாதம் ஒப்பந்தம் கோரப்பட்டது.  ஆர்.கே.& சன்ஸ், எஸ்.கே.ஆர்கான்ஸ், தாமஸ் அய்யாதுரை, எஸ்.பி. பில்டர்ஸ், கவிதா ஆகியோர் ஒப்பந்ததில் கலந்து கொண்டு பணி உத்தரவு பெற்றனர். எஸ்.கே.  ஆர்கான்ஸ் 4ஆவது வார்டில் மட்டும்  ரூ .78 லட்சம் மதிப்பீட்டில் 14 சாலைகள் அமைக்க பணி உத்தரவு பெற்றனர். அதில்  ஜோதி நகர் 4, 5, 6 மற்றும் சண்முகபுரம் 4ஆவது தெருவில் மட்டுமே சாலைகள் போடப்பட்டன. ராமநாதபுரம் 2, 3 தெருக்கள்,  முருகப்பா நகர் காந்தி தெரு, காமராஜ் நகர் 4, 5 தெருக்கள் நேதாஜி நகர் 2ஆவது  தெரு, கிரிஜா நகர் பிரதான சாலைகள் போடப்படாமல் காலம் தாழ்த்தி வந்ததோடு,  சாலையை மில்லிங் செய்து விட்டு சாலை அமைக்காமல் விட்டு விட்டனர். இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டனர். மாமன்ற உறுப்பினர், அதிகாரிகள் உடனடியாக சாலைகளை அமைக்க வலியுறுத்தியும் ஒப்பந்ததாரர் கண்டு கொள்ளவில்லை. இந்நிலையில் அப்பகுதி மக்கள் சாலை பணிகளை உடனடியாக துவக்கக் கோரி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த  காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு நடத்தினர். ஆனால்  சாலை பணி துவங்கினால்தான் கலைந்து செல்வோம் என போராட்டத்தில் ஈடுபட்ட வர்கள் தெரிவித்தனர். இதையடுத்து காவல்துறையினர் ஒப்பந்ததாரரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஒப்பந்ததாரர் உடனே பணி துவங்குவதாக அறிவித்தார். மேலும் உடனடி யாக ஆட்களை வரவழைத்து பணியை துவக்கினார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதில் மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெய ராமன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.பாக்கியம், பகுதிச் செயலாளர் கதிர்வேல், பகுதிக்குழு உறுப்பினர் அலமேலு  கிளைச் செயலாளர் குமார் உள்ளிட்ட பொது மக்கள் கலந்து கொண்டனர்.