காஞ்சிபுரம், டிச.16- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் காஞ்சிபுரம் மாவட்ட 23ஆவது மாநாடு பட்டு நகரில் செந்தொண்டர்களின் மிக் கான அணிவகுப்புடன் துவங்கியது. மாநாட்டு செங்கொடியை மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.ரமேஷ் ஏற்றி வைத்தார். முன்னதாக மறைந்த தோழர்கள் கே.எஸ்.பி, டி.லட்சுமணன், இ.இராமநாதன் ஆகியோரின் நினைவு சுடரினை கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர்கள் ஜி.எஸ்.வெங்கடேசன், எஸ்.திருஞானம், ஆர்.சேகர் ஆகியோர் கொண்டு வந்தனர். இதனை மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.பாஸ்கர், மாவட்டக்குழு உறுப்பினர்கள் டி.பிரேமா, ஆறுமுகம் ஆகியோர் மிகுந்த உணர்ச்சிப்பெருக்குடன் பெற்றுக் கொண்டனர். பின்னர் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே.நேரு தலைமையில் நடைபெற்ற மாநாட்டு துவக்கநிகழ்ச்சியில் கட்சி யின் மாநில செயற்குழு உறுப்பினர்கள் பெ.சண்முகம், மாவட்டச் செயலாளர் சி.சங்கர், ஆகியோர் உரையாற்றினர். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே.நேரு, எல்.முருகேசன், எஸ்.புவனேஸ்வரி ஆகியோர் தலைமை யில் தொடங்கிய பிரதிநிதிகள் மாநாட்டில் செயற்குழு உறுப்பினர் ஆர்.சௌந்தரி அஞ்சலி தீர்மானத்தை முன்மொழிந்தார். மாவட்டக்குழு உறுப்பினர் எ.வாசுதேவன் வர வேற்றார். கட்சியின் மாநில செயற் குழு உறுப்பினர் பெ.சண்முகம் இம்மாநாட்டை துவக்கி வைத்து உரை யாற்றினார். மாவட்டச் செயலாளர் சி.சங்கர் வேலை அறிக்கையையும், செயற்குழு உறுப்பினர் ஆர்.மதுசூ தனன் நிதிநிலை அறிக்கையும் சமர்ப் பித்தனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் புதிய அரசு மருத்துவ கல்லூரி அமைக்க வேண்டும், செங்கல்பட்டு -காஞ்சி புரம் அரக்கோணம் இணைக்கும் ரயில் பாதையை இருவழிப் பாதை யாக அமைத்திட வேண்டும், காஞ்சி மாநகரில் புதிய புறநகர் பேருந்து நிலையம் 24 மணி நேரமும் செயல் படக்கூடிய அளவில் அமைத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. மாநாட்டு வளாகத்தில் பாரதி புத்தகாலயத்தின் புத்தகக் கண்காட்சியும் நடைபெற்று வருகிறது.