காலை உணவுத் திட்டத்தையும், பள்ளி மாணவர்களையும் கொச்சைப்படுத்தும் விதமாக கருத்துக்களை பதிவிட்டுள்ள தினமலர் நாளிதழை புறக்கணிக்கும் விதமாக செங்கல்பட்டு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முன்பு இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் தினமலரை எரித்து போராட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் மு தமிழ்பாரதி, கல்லூரி கிளை தலைவர் சாரதி, செயலாளர் சத்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.