மதுரை, ஆக.5-
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வணி கர்களான ஜெயராஜ், இவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை கடந்த 2020 ஆம் ஆண்டில் சாத்தான்குளம் காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்று கொடூரமாகத்தாக்கினர். இதில் 2 பேரும் கொல்லப் பட்டனர். இந்த இரட்டைக்கொலை வழக்கு விசாரணை மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. பல்வேறு முக்கிய சாட்சிகள் நீதிமன்றத்தில் ஆஜராகி, சாட்சியம் அளித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த வழக்கின் விசாரணை பொறுப்பு நீதிபதி தமிழரசி முன்பு சனிக்கிழமையன்று நடைபெற்றது. அப்போது இந்த வழக்கில் கைதான 9 காவல்துறையினரும் ஆஜர்படுத்தப்பட்டனர்.
ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் உடல்களை அரசு மருத்துவ மனை மருத்துவர்கள் பரிசோதனை செய்து, தாக்கல் செய்த அறிக்கை யை ஆய்வு செய்வதற்காக எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவைச் சேர்ந்த மருத்து வர் அரவிந்த்குமார் நீதிபதி முன்பு ஆஜராகி சாட்சியம் அளித்தார். அப்போது அவரிடம் ஸ்ரீதர், செல்லதுரை, முருகன் ஆகியோர் தரப்பில் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது. இதற்கு மருத்துவர் அரவிந்த்குமார், பிரேத பரிசோதனை அறிக்கையில் ஜெயராஜும், பென்னிக்சும் இறந்ததற்கு அவர்களின் உடல்களில் இருந்த காயங்கள்தான் என கூறப்பட்டு இருந்தது. அதை நாங்கள் உறுதிப்படுத்தியுள்ளோம் என்று தெரிவித்தார். இதன்பின்னர் இந்த வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.