“மெரினாவில் மே தினம் நூற்றாண்டு கொண்டாட்டம்” என்ற தலைப்பில் புத்தக வாசிப்பு இயக்கம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம், பாரதி புத்தகாலயம் சார்பில் சென்னை ஓட்டேரியில் சனிக்கிழமை (ஏப். 30) நடைபெற்றது. அதன் ஒருபகுதியாக “சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் வாழ்வும், பணியும்”, “கம்யூனிஸ்ட் அறிக்கை”, “ஏகாதிபத்தியம் - முதலாளித்துவத்தின் உச்சகட்ட வளர்ச்சி”, “குடும்பம், தனிச்சொத்து, அரசு” “கற்பனாவாத சோசலிசமும், விஞ்ஞான சோசலிசமும்”, “அரசும் புரட்சியும்” ஆகிய புத்தகங்கள் அடங்கிய தொகுப்பின் விற்பனையை சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் துவக்கி வைத்தார். உடன் சம்மேளன பொதுச்செயலாளர் கே.ஆறுமுக நயினார், பொருளாதார நிபுணர் வெங்கடேஷ் ஆத்ரேயா, தமுஎகச மதிப்புறு தலைவர் ச.தமிழ்ச்செல்வன், சம்மேளன பொருளாளர் சசிகுமார் ஆகியோர் இருந்தனர்.