districts

img

ஊழல் பேர்வழிகளை பாதுகாக்கிற பாஜக ஆட்சி இனியும் தொடரக்கூடாது

சிதம்பரம், மார்ச் 31- ஊழல் பேர்வழிகளை பாது காக்கிற பாஜக ஆட்சி இனியும் தொடரக்கூடாது என்று  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் உ.வாசுகி கூறினார்.  சிதம்பரம் காந்தி சிலை அருகே  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நடைபெற்ற அரசியல் விளக்கப் பொதுக்கூட்டத்தி பேசிய அவர்,  பிரதமராக மோடி,  பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசு கிற பிதற்றல் நிறைந்த பேச்சுக்களை ஏதோ உளறல், நகைச்சுவை என்று கடந்து போய் விடக்கூடாது. இவை விஷமத்தனமானவை, இந்த பேச்சுக்களின் பின்விளைவால்    சிறு பான்மை இஸ்லாமியர்களும் கிறிஸ்து வர்களும் குறி வைத்து தாக்கப்படு கிறார்கள்.இதுதான் பாஜக அரசு செய்திருக்க கூடிய சாதனையாக உள்ளது.  இந்தியா முழுக்க பல்வேறு இடங்களில் பட்டியலின மக்கள் பழங்குடியின மக்கள் பல்வேறு பாதிப்பு களுக்கு உள்ளாகிறார்கள்.   பெண்கள் குழந்தைகள் கடுமை யான வன்முறைக்கு உள்ளாக்கப்படு கிறார்கள்.   பாஜக தலைவர்கள் எங்கெல்லாம் போகிறார்களோ அங்கெல்லாம் கலவரம் ஏற்படுகிறது.   வன்முறை செய்யக்கூடிய குற்ற வாளிகளை மோடி அரசு போற்றிப் பாதுகாக்கிறது.   8  வயது குழந்தை கூட்டு பாலியல் வல்லுறவு செய்து அடித்துக் கொன்ற சம்பவத்தை நிகழ்த்தியதும் இந்த பாஜக தான்.  மல்யுத்த வீராங்கனைகள்  பாலியல் ரீதியில் துன்புறுத்தப்பட்டு தில்லி வீதியில் போராடினார்கள்.  இதில் சம்பந்தபட்ட பாஜக தலைவர் பிரிட்ஜ் பூஷன்சரண்சிங் எம்பி மீண்டும் நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கிறார்.  குற்றவாளிகள் நிறைந்து இருக்கக் கூடிய கட்சி மற்றும்  ஊழல் பேர்வழி கள் பெண்களையும் குழந்தைகளை யும் துச்சமாக மதிக்கிறவர்களை பாது காக்கிற கட்சியாகவும் ஆட்சியாக இது இருக்கிறது. எதிர்க்கட்சி தலைவர்களை வேட்டையாடிக் கொண்டிருக்கிறது அமலாக்க துறையை இதுக்கெல்லாம் ஆதரவாக பயன்படுத்துகிறது. இந்த ஆட்சி மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது.  உயிர்வாழ அத்தியாவசி பொருளாக உள்ள  பால், தயிர், மோர், மாவுக்கு உள்ளிட்ட உணவுப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி போட்ட கொடூரஅரசு என்பது இதுதான்.  இந்த வரிகளையும் மாநிலங்களுக்கு பகிர்ந்து கொடுக்காமல் முழுவதும் எடுத்துக்கொள்ளும் வேலையை செய்யும் மோடி அரசு மீண்டும் தொடரலாமா?    ஏப்ரல் 19 நம்முடைய தலைவிதி தமிழகம், புதுச்சேரி உள்பட  தீர்மானிக்கிறது தினம் . ஆகவே எந்த அச்சுறுத்தலுக்கும் பயப்படாமல் எவ்வித அன்பளிப்புக்கும் விலை போகாமல் கண்டிப்பாக இந்த அணியை சேர்ந்தவர்கள் வெற்றி பெற பாடுபடவேண்டும். சிதம்பரம் தொகுதியில் திருமாவுக்கு  பானை சின்னத்திற்கு  வாக்களிக்கவேண்டும் என்றார். இந்த கூட்டத்திற்கு  கட்சியின் சிதம்பரம் நகர செயலாளர் எஸ்.ராஜா தலைமை தாங்கினார். கட்சியின்  மாவட்ட செயலாளர் ஜி.மாதவன், மாநில குழு உறுப்பினர் எஸ்.ஜி ரமேஷ்பாபு, முன்னாள் மாநிலக்குழு உறுப்பினர் மூசா, மாவட்டச்செயற்குழு உறுப்பினர் தேன்மொழி, மாவட்டக்குழு உறுப்பி னர் பி.வாஞ்சிநாதன், திமுக நகர மன்ற உறுப்பினர் வெங்கடேசன்,  காங்கிரஸ் கட்சி சார்பில்  ராஜா சம்பத்குமார், விடுதலைசிறுத்தைகள் கட்சி மாவட்டச்செயலாளர் அரங்க தமிழ்ஒளி, திராவிடர் கழகம் யாழ்திலிபன்,  தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்டச்செயலாளர் சேரலாதன் உள்ளிட்ட கூட்டணி கட்சியின் நிர்வாகி கள் கலந்துகொண்டு  பேசினர்.  சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் ராமச்சந்திரன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் விஜய், செல்லையா,  பி.ஜே ஸ்டாலின், ஆழ்வார், மனோகர், ஜெயசித்ரா  உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள், கூட்டணிக்கட்சியினர்  கலந்து கொண்டனர். நிறைவாக நகர்மன்ற துணைத் தலைவர் எம்.முத்துக்குமரன் நன்றி கூறினார்.