சென்னை,மார்ச் 5- பெங்களூரில் இருந்து சென்னை வந்திருந்த ஒரு குடும்பத்தினர் மெரினா கடற்கரைக்கு சென்றி ருந்தனர். அப்போது அவர்கள் குதிரை சவாரி செய்வதற்காக குதிரை ஓட்டி ஒருவரை அழைத்து பேசிக்கொண்டிருந்தனர். இந்த நேரத்தில் குதிரை எதிர்பாராதவிதமாக எட்டி உதைத்தது. இதில் எபிநேசர் என்ற சிறுவனின் முகத்தில் உதை விழுந்தது. அவனது மூக்கு மற்றும் கன்னத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து திரு வல்லிக்கேணியில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுதொடர்பான புகாரின் பேரில் அண்ணாசதுக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி னர். குதிரை ஓட்டியான அசோக்கை அழைத்து விசாரணை நடத்திய போலீசார் அவரிடம் எழுதி வாங்கிவிட்டு அனுப்பி வைத்தனர்.