districts

சென்னை முக்கிய செய்திகள்

போக்குவரத்து கழக அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டங்கள் போக்குவரத்து  கூடுதல் தலைமைசெயலாளர் உறுதி

சென்னை,செப்.21 அரசுப் போக்குவரத்துக் கழக அலு வலகங்களில் அக்.3 அன்று மாற்றுத்திற னாளிகள் குறைதீர் கூட்டங்கள் நடத்த உத்தர விடுவதாக போக்குவரத்து துறையின் கூடு தல் தலைமை செயலாளர் வாக்குறுதி அளித்துள்ளார். அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் மாற்றுத்திறன் ஊழியர்கள் சந்தித்து வரும் பிரச்சனைகள் குறித்து விளக்குவதற்கும், தீர்க்க வலி யுறுத்து வதற்கும் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாது காப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநில நிர்வாகிகள், தமிழக போக்கு வரத்துத்துறையின் கூடுதல் தலைமை  செயலாளர் பனீந்திர ரெட்டியை புதனன்று சந்தித்தனர். விரிவான கோரிக்கை மனுவும் அளிக்கப்பட்டது. மனுவை பெற்றுக்கொண்டுப் பேசிய கூடுதல் தலைமை செயலாளர், அனைத்துப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் மாற்றுத்திறன் ஊழியர்கள் சந்தித்து வரும் பிரச்சனைகளைத் தீர்க்க உரிய நடவடிக்கைகள் எடுப்பதாக வாக்குறுதி அளித்தார். மேலும் அக்-3 செவ்வாய் அன்று  அனைத்துப் போக்குவரத்துக் கழக அலு வலகங்களிலும் மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டங்கள் நடத்த அதிகாரி களுக்கு உத்தரவிடுவதாகவும் வாக்குறுதி அளித்தார். இந்த சந்திப்பில் ஊன முற்றோர் உரிமைகளுக்கான தேசிய மேடையின் செயல் தலைவர் எஸ்.நம்பு ராஜன், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் பொதுச் செயலாளர் பா. ஜான்ஸிராணி, மாநில செயலாளர்களில் ஒருவரான பி.ஜீவா, மாநில துணைத்தலைவர் கே.பி. பாபு, வட சென்னை மாவட்ட தலைவர் என். ஜெயச்சந்திரன், போக்குவரத்து மாற்றுத் திறன் ஊழியர் கிளையின் மாநிலக்குழு உறுப்பினர் கடலூர் ராஜேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

லஞ்சம் வாங்கிய மின்வாரிய பொறியாளர் கைது

சென்னை,செப்.21- அடையாறு பகுதியை சேர்ந்த கிருஷ்ணகுமார் என்பவர் புதிதாக கட்டியுள்ள வீட்டுக்கு மின் இணைப்பு பெறுவதற்காக பெசன்ட் நகரில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்தார். அப்போது உதவி பொறியாளர் பாலசுப்பிரமணியம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். இதனை கொடுக்க விரும்பாத கிருஷ்ண  குமார் அது பற்றி லஞ்ச ஒழிப்பு காவல்துறையில் புகார் செய்தார். அவர்கள் கொடுத்த ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டை கிருஷ்ணகுமார் பொறியாளரிடம்  கொடுத்தார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் பாலசுப்பிரமணியத்தை கைது செய்தனர்.

மூளையில் 2 கட்டிகள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்

சென்னை,செப்,21- பெரும்பாக்கத்தில் உள்ள கிளெனீகிள்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி மருத்துவமனை மிகவும் சிக்கலான உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய 2 மூளைக் கட்டிகளை சென்னையைச் சேர்ந்த 38 வயது நோயாளிக்கு அகற்றி சாதனை படைத்துள்ளது. இம்மருத்துவமனையின் மிகவும் நிபுணத்துவம் வாய்ந்த நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் குழு, மிரர் இமேஜ் பாணியில் பேச்சாற்றலைக் கட்டுப்படுத்தும் மூளையின் இடது மற்றும் வலது பக்கங்களில் உள்ள 2 கட்டிகளை திறமையாக அறுவை சிகிச்சை மூலம் அகற்றி உள்ளனர். பொதுவாக, இந்த அறுவை சிகிச்சையானது மிகவும் ஆபத்தானதாகும். ஏனெனில் இந்த அறுவை சிகிச்சையின்போது ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் அது நோயாளிக்கு பார்வை இழப்பை ஏற்படுத்தும். இது குறித்த பிரச்சினைகள் அவருக்கும் அவரது குடும்பத்தினரிடம் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட இந்த அறுவை சிகிச்சை மிகவும் வெற்றிகரமாக நடந்துள்ளது. இரண்டு கட்டமாக நடைபெற்ற இந்த அறுவை சிகிச்சை மொத்தம் 10 மணி நேரம் நடைபெற்றது என மூத்த ஆலோசகரும், நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணருமான நைகல் பி சிம்ஸ் தெரிவித்தார். அறுவை சிகிச்சையில், முதலில் நோயாளிக்கு மண்டை ஓட்டை திறந்து பெருமூளையின் வலது புறத்தில் இருந்து கட்டி அகற்றப்பட்டது. இரண்டு வாரங்களுக்கு பிறகு இடது பெருமூளையில் உள்ள கட்டி அகற்றப்பட்டது என்றும் அவர் கூறினார்.

மாணவிக்கு பாலியல் தொல்லை: வாகன ஓட்டுநர் கைது 

மதுராந்தகம்,செப்,21-  மதுராந்தகத்தை அடுத்த வள்ளுவப்பாக்கம் ஏரிக்கரை தெருவை சேர்ந்த வர் எபி என்ற குமார் (வயது 32). மதுராந்தகத்தில் உள்ள தனியார் பள்ளியில் வேன் ஓட்டுநராக  வேலை செய்து வருகிறார்.  கடந்த ஜூலை மாதம் அந்த பள்ளியில் படிக்கும் 10-ம் வகுப்பு மாணவி ஒரு வருக்கு பிறந்தநாள் என்ப தால் அவருக்கு பிறந்த நாள் பரிசு தருவதாக கூறி அதே ஊரில் உள்ள செல்லியம்மன் கோவி லுக்கு அருகே அழைத்து பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து யாரிடமாவது சொன்னால் உனது குடும்பத்தை காலி செய்து விடுவேன், உனது புகைப்படத்தை இணைய தளத்தில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து மேல்மருவத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் காவல்துறையினர் குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

ஓசியில்  சாப்பாடு கேட்டவர் அடித்துக்கொலை

காஞ்சிபுரம்,செப்.21- காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை பகுதியை சேர்ந்தவர் திரு மலை (வயது50). கூலித் தொழிலாளி.  இவர் அதே பகுதி காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலையில் ஓட்டலில் அடிக்கடி சாப்பிடுவது வழக்கம். இந்த நிலையில் திருமலை தனக்கு ஓசியில் சாப்பாடு தரும்படி ஓட்டல் நடத்திவரும் பச்சை யம்மாளிடம் கேட்டார். இதனை ஓட்டலில் ஊழி யராக வேலை பார்த்து வந்த ராமு என்கிற ராமச் சந்திரன்(40) என்பவர் கண்டித்தார். இதில் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது.  ஆத்திரம் அடைந்த ராமச்சந்திரன் அருகில் கிடந்த சவுக்கு கட்டையால் திருமலையை சரமாரியாக தாக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தார். உடனே ராமச்சந்திரன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். தகவல் அறிந்ததும் காஞ்சிபுரம் தாலுகா போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதே பகுதி யில் பதுங்கி இருந்த ராமச் சந்திரனை கைது செய்த னர்.

நெல்லை-சென்னை வந்தே பாரத் ரயில் தாம்பரத்தில் நின்று செல்ல கோரிக்கை

சென்னை, செப்,21-  சென்னை எழும்பூர்-திருநெல்வேலி இடையே வந்தே பாரத் ரயில் சேவை வருகிற 24-ந்தேதி முதல் தொடங்குகிறது.  ரயில் விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம் ஆகிய நிலையங்களில் மட்டுமே நின்று செல்லும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. தென் மாவட்ட மக்கள் அதிகம் பயன்படுத்தும் தாம்பரம் ரயில் நிலை யத்தில் வந்தே பாரத் ரயிலை நிறுத்தி சென்றால் தான் பயணிகள் ஏறி, இறங்கு வதற்கு வசதியாக இருக்கும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.   புறநகர் பகுதி மக்கள் எழும்பூர் நிலையம் வந்து அதன்பிறகு மாறி செல்வதற்கு பதிலாக தாம்பரம் ரயில் நிலையத்தில் நிறுத்தினால் பெரும்பாலானவர்கள் அங்கு இறங்குவதன் மூலம் கால நேரம் மிச்சப்படும் என தெரிவித்துள்ளனர். ரயில்வே வாரியத்துக்கு இது தொடர்பான கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. விரைவில் இது பரிசீலிக்கப்பட்டு தாம்பரத்தில் வந்தே பாரத் ரயில் நின்று செல்ல அனு மதிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரி வித்தனர்.

  காலமானார்

 வேலூர். செப் 21 -  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேலூர் மாவட்டக்குழு முன்னாள் உறுப்பினரும், தமிழ்நாடு அரசு  அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்தின் திருப்பத்தூர்  மாவட்டச் செயலாளர் ஏ. ஞானசேகரனின் துணைவியாரு மான ராதா (வயது 57) உடல்நலக்குறைவால் புதனன்று (செப்.20) காலமானார்.  இறுதி நிகழ்ச்சி  வியாழனன்று (செப்.21) திருப்பத்தூர் ஹவுசிங் போர்டு இல்லத்தில் நடைபெற்றது. பின் ஹவுசிங்  போர்டு அருகில் உள்ள இடுகாட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக அவரது உடலுக்கு சிபிஎம் சார்பில் வேலூர்-திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் எஸ்.தயாநிதி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.சாமிநாதன், பி.காத்தவராயன், எம்.இந்துமதி, தாலுக்கா  செயலாளர் எம்.காசி, தாலுக்கா குழு உறுப்பினர்கள் கேசவன், ரவி, சாதிக்பாஷா, காமராஜ், செல்வம் , கோவிந்த ராஜ் (மாற்று  திறனாளிகள் சங்கம்) ஆகியோர் மரியாதை  செலுத்தினர்.

கனமழையால் வீடுகளை சூழ்ந்த தண்ணீர்: பொதுமக்கள் சாலை மறியல்

கிருஷ்ணகிரி,செப்.21-  ஊத்தங்கரை வட்டம், வெங்கடத்தாம்பட்டி ஊராட்சி கொல்லப்பட்டியில் 50 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பெய்த மழை நீர் இன்னும் வடியாமல்  கிராமத்தை சூழ்ந்து தேங்கி நின்றது. அப்போதே இது குறித்து ஊராட்சி நிர்வாகம்,வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளித்துள்ளனர். பல ஆண்டுகளாக மழை காலத்தில் இதே பிரச்சனை தொடர்ந்து  கொண்டிருக்கிறது. நீண்ட காலமாக உள்ள இந்த கிராமம்  சற்று தாழ்வான பகுதியில் அமைந்துள்ளது. தற்போது தண்ணீர் வடிவதற்கான கால்வாய் மற்றும் நீர் வடியும் பாதை களை சிலர் ஆக்கிரமித்தும்,மேடாக்கியும் உள்ளதால் கடந்த  சில ஆண்டுகளாகவே இப்பிரச்சனை நீடித்து வருகிறது. இதற்கு நிரந்தரத்தீர் ஏற்படுத்தக்கோரி ஊத்தங்கரை செல்லும்   சாலையில் பாதிக்கப்பட்ட மக்கள் மறியலில் ஈடுபட்டனர். அங்கு வந்த அரசு அதிகாரிகள் உடனடியாக தண்ணீர் வடிந்திடவும், இப்பிரச்சனைக்கு நிரந்தரமாக தீர்வு காணவும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததால் மறியலில்  ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.