புதுச்சேரி, நவ.27- நாகப்பட்டினம்-விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் ‘யூ’ வடிவு சாலை மூடப்பட்டதை கண்டித்து மறியல் போராட்டம் நடைபெற்றது. புதுச்சேரி-விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் புதிதாக நாகப்பட்டினம் விழுப்புரம் 4 வழிச் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதில் மதகடிப்பட்டு எல்.ஆர். பாளையம் அருகில் தேசிய நெடுஞ்சாலை துறை சுங்கச்சாவடி அருகில் ‘யூ’ வளைவு இல்லாமல் வரி வசூல் நோக்கத்தில் சுங்கச்சாவடி புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையில் மதகடிப்பட்டு உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் தினந்தோறும் மிக எளிதில் 4 மீட்டரை கடக்க வேண்டிய தூரத்தை நான்கு கிலோமீட்டர் சுற்றி வரும் வகையில் சாலை மாற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மத கடிப்பட்டு கடைவீதியில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் அப்பகுதி வியா பாரிகள், சிஐடியு தனியார் போக்குவரத்து, அகில இந்திய விவசாய சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பேச்சுவார்த்தை புதுச்சேரி எல்லை என்பதால் விழுப்புரம் மாவட்ட காவல்துறையினர் புதுச்சேரி காவல்துறையினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.அப்போது சாலை வசதி ஏற்படுத்தி வருவதாகவும் இது குறித்து இன்னும் ஒரு வாரத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். அதை ஏற்றுக்கொண்டு போராட்டத்தை கைவிட்டனர்.