திருபெரும்புதூர்,ஆக.25-
சென்னை, டி.பி. சத்திரம் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர்(வயது31). இவர் அம்பத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் இயக்குநராக பணியாற்றி வந்தார். மோட்டார் சைக்கிளில் சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக காஞ்சிபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். திருபெரும்புதூர் அரசு மருத்துவமனை அருகே டிப்பர் லாரி திடீரென பைக் மீது மோதியது. இதில் அவர் நிலைதடுமாறி சாலையில் விழுந்தபோது இடதுபுறம் சென்று கொண்டிருந்த மற்றொரு லாரியின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார்.