கடலூர்,ஜன.7- தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட இருக்கும் ‘டிஜிட்டல் கிராப் சர்வே’ என்ற திட்டத்திற்கு தொழில்நுட்ப உபகரணங்கள் வழங்காமல் முழுமையாக கிராம நிர்வாக அலுவலர்களை முழுமையாக பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் வருவாய் நிர்வாக ஆணையரின் ஊழியர் விரோத போக்கை கண்டித்தும் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர் கடலூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் செந்தில் முருகன் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்க மாவட்ட தலைவர் கார்த்திகேயன், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் ஜெயராமன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.