districts

img

திருவள்ளூர் அருகே போக்சோ சட்டத்தில் ஆசிரியர் கைது

திருவள்ளூர், ஜூன் 24- திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக் கம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர்  சுந்தரராஜன். இவர் தேர்வாய் கண்டிகை யில் உள்ள அரசு ஆதிதிராவிடர் துவக்கப் பள்ளியில் ஆசிரியராக பணி யாற்றி வருகிறார். இவருக்கு குடிப் பழக்கம் உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் வீட்டின் அருகே உள்ள 6ஆம் வகுப்பு படித்து வரும் 12 வயது  சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடு பட்டுள்ளார்.  இதுகுறித்து அந்த சிறுமி  தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். அத னைத் தொடர்ந்து அந்த சிறுமியின் பெற்றோர்  சுந்தர்ராஜனிடம் விசாரித்துள்ளனர். அப்போது சுந்தரராஜன் அவர்களை தரக்குறைவாக பேசியுள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் புல்லரம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

;