districts

img

பழனி: பள்ளி மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் – ஆசிரியர் கைது  

பழனி அருகே செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர் ஒருவர் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.  

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே அரசு உதவி பெறும் உயர்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் தற்காலிக ஆங்கில ஆசிரியராக 30 வயதான நாட்ராயன் என்பவர் பணியாற்றி வருகிறார். ஏற்கனவே திருமணமான இவர், அதே பள்ளியில் படித்து வரும் 10 ஆம் வகுப்பு மாணவியிடம், அந்த சிறுமியை திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தைகளை கூறி வந்திருக்கிறார்.  மாணவியை திருமணம் செய்து கொள்வதாக கடந்த ஓராண்டாக சொல்லி வந்த ஆசிரியர், அவ்வப்போது மாணவியை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவுகள் தந்துள்ளார்.

இதுகுறித்து மாணவியின் பெற்றோருக்கு தெரியவர உடனே மாணவியின் தாயார் பழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதனை தொடர்ந்து போலீசார் இந்த வழக்கை போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்து, ஆசிரியர் நாட்யானை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைத்திருக்க உத்தரவிட்டுள்ளதை அடுத்து, போலீசார் நாட்ராயனை சிறையில் அடைத்தனர். 

;