districts

மாணவிக்கு பாலியல் தொல்லை போக்சோ சட்டத்தில் ஆசிரியர் கைது

வேலூர் மார்ச் 27 - மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த திருவலத்தில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு 7ஆம் வகுப்பு படிக்கும் மாணவி, சனிக்கிழமையன்று (மார்ச் 27) மாலை தின்னரை குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் மாணவியை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனும தித்தனர். இதன்பின்னர் உயர் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து திருவலம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், அதே பள்ளி ஆசிரியர் முரளி கிருஷ்ணா (55), மாணவியை வகுப்பறைக்கு தனியாக அழைத்து பாலியல் தொல்லை கொடு த்ததும், தனது வீட்டு முகவரியை கொடுத்து தனியாக வரும் படி வற்புறுத்தியதும் தெரிய வந்தது. இதனையடுத்து ஆசிரி யரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

;