districts

சென்னை முக்கிய செய்திகள்

மூடப்படும் டாஸ்மாக் கடைகள்  பட்டியல் தயாரிப்பு  பணி 

சென்னை,ஏப்.26- தமிழ்நாட்டில் பள்ளி- கல்லூரிகள், கோவில்கள் அருகில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்கிற கோரிக்கை நீண்ட நாட்களாகவே இருந்து வருகிறது.  அதே நேரத்தில் டாஸ்மாக் கடைகளை படிப்படியாக குறைக்க வேண்டும் என்றும் அரசியல் கட்சியினர் தொடர்ந்து கூறி வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு தமிழகத்தில் 500 மதுபான சில்லரை விற்பனை கடைகள் மூடப்படும் என்று மாநில அரசு  அறிவித்தது.  இதைத்தொடர்ந்து சென்னை உள்பட அனைத்து இடங்களிலும் பள்ளி, கல்லூரிகள் மற்றும் கோவில்களின் அருகில் உள்ள டாஸ்மாக் கடைகளை கணக்கெடுக்கும் பணி தொடங்கி உள்ளது. 50 மீட்டர் இடைவெளியில் செயல்படும் டாஸ்மாக் கடைகளும் மூடப்பட வேண்டிய கடைகளின் பட்டியலில் உள்ளது. அது போன்று குறைந்த இடைவெளியில் உள்ள கடைகளும் மூடப்பட உள்ளன. தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் இதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் பள்ளிகள் மற்றும் கோவில்களின் எதிரில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி டாஸ்மாக் நிர்வாகத்துக்கு பல்வேறு புகார்கள் சென்றுள்ளன.   இதையடுத்து அது போன்ற கடைகளும் மூடப்படவேண்டிய டாஸ்மாக் கடைகளின் பட்டியலில் இருப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் போரூர் டோல்கேட் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை (எண்.9170), பள்ளிக்கூடம் அருகில் செயல்பட்டு வருவதாக புகார்கள் கூறப்பட்டு வந்தன. இதேபோன்று போரூரில் இருந்து குன்றத்தூர் செல்லும் சாலையில் உள்ள டாஸ்மாக் கடையும் (எண்9043) பள்ளி எதிரில் உள்ளது. இந்த 2 கடைகளும் மூடப்பட வேண்டிய டாஸ்மாக் கடைகளின் பட்டியலில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. வடபழனி ஏ.வி.எம். ஸ்டூடியோ பகுதியில் பெருமாள் கோவில் எதிரில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடை (எண்506), விருகம்பாக்கம், ஆழ்வார் திருநகர் பகுதியில் பள்ளி எதிரில் உள்ள டாஸ்மாக் கடை (எண்8870) மற்றும் செங்குன்றம், அலமாதி ஆட்டந்தாங்கல் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை ஆகியவையும் மூடப்பட வேண்டிய கடைகளின் வரிசையில் இருப்பதாக டாஸ்மாக் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதேபோன்று திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் பள்ளி, கோவில்கள் அருகில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூடும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நடவடிக்கைகள் இன்னும் சில தினங்களில் நிறைவுபெற்று பிரச்சினைக் குரிய கடைகள் மூடப்படும் என்று தெரிகிறது.

ஐஇடி  இந்தியா உதவித்தொகை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

சென்னை,ஏப்.26- இன்ஸ்டிடியூஷன் ஆப் என்ஜினியரிங் அன்ட் டெக்னாலஜி (ஐஇடி) ‘ஐஇடி இந்தியா கல்வி உதவித்தொகை  விருதிற்கான விண்ணப்பங்களை வரவேற்பதாக அறிவித்துள்ளது. 7வது ஆண்டாக இந்த கல்வி உதவித் தொகையை இது வழங்குகிறது. வருங்கால பொறியியல் தலைவர்களை கவுரவிக்கும் விதமாக மொத்தம் 10 லட்ச ரூபாய் பரிசுத் தொகையை இக்கல்வி நிறுவனம் வழங்குகிறது.  அனைத்து ஏஐசிடிஇ, யுஜிசியால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள்  மற்றும் தேசிய கல்வி நிறுவனங்களைச்  சேர்ந்த மாணவர்களும் இந்த கல்வி உதவித் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.  இளங்கலை பொறியியல் மாணவர்களின் தனிப்பட்ட சிறப்பையும் புதுமையையும் திறமையையும் பரிசு அளித்து கவுரவிக்கும் நோக்கில் இந்த கல்வி உதவித் தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.  இது நாட்டின் இளங்கலை பொறியியல் மாண வர்களுக்கு வழங்கப்படும் மிகப்பெரிய உதவித்தொகை ஆகும். இதற்கு ஜூன் 3 ஆம்தேதி  வரை விண்ணப்பிக்கலாம்.

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தவித்த  2 வயது குழந்தை பெற்றோரிடம் ஒப்படைப்பு

சென்னை,ஏப்.26- சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 10-வது பிளாட்பாரத்தில் 2 வயது ஆண் குழந்தை தனியாக நின்று தவித்துக்கொண்டிருந்தது. குழந்தை அணிந்திருந்த உடை, அங்க அடையாளம் பற்றி அறிவிப்பு செய்தார்கள். ஆனால் குழந்தையின் பெற்றோரை கண்டு பிடிக்க முடியவில்லை. இதனால் குழந்தை அழுது கொண்டே இருந்தது. இதையடுத்து ரயில்வே பாதுகாப்பு படையினர் குழந்தையை பேட்டரி காரில் அமர வைத்து ஒவ்வொரு பிளாட்பாரமாக சென்று பெற்றோரை தேடினர்.   அப்போது 4-வது பிளாட் பாரத்தில் ஒரு குடும்பத்தினர், குழந்தையை காணவில்லை என்று தேடிக் கொண்டிருந்த னர். பேட்டரி காரில் குழந்தை இருப்பதை பார்த்ததும் அது தங்கள் குழந்தை என்று ரயில்வே பாதுகாப்பு படையினரிடம் தெரிவித்தனர். அந்த குழந்தையும் அழுகையை நிறுத்தியபடி தாயிடம் ஓடிச் சென்றது. விசாரணையில் குழந்தையின் பெற்றோர் ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்த முகமது இப்ராகிம்-நபிஷா என்று தெரிய வந்தது.

கோடைகால இலவச விளையாட்டு பயிற்சி

திருவண்ணாமலை,ஏப்.26-  திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் வருகிற 1ஆம்  தேதி முதல் 15ஆம்  தேதி வரை கோடைக்கால பயிற்சிகள் நடைபெற உள்ளது.  இதில் தடகளம், கூடைபந்து, ஹாக்கி உள்ளிட்ட விளையாட்டு பயிற்சிகள் இருபாலாருக்கும் அளிக்கப்படுகிறது. மேலும்  விளையாட்டு போட்டிகளில் பங்கு பெற விருப்பம் உள்ள மாண வர்களுக்கு சான்று, ஆதார் அட்டை அல்லது பாஸ்போர்ட், பார்ஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள் ஆகியவற்றினை வருகிற 1 - ந் தேதியன்று காலை 9 மணிக்கு நேரில் எடுத்து வரவேண்டும்.    6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள், கல்லூரி முதலாம் ஆண்டு முதல் 3-ம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் பங்கேற்கலாம்.  மேலும் கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு இளைஞர் நல அலுவலரை 04175-233169 அல்லது 7401703484 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்டஆட்சியர்  பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.

வேலூர் புதிய பேருந்து நிலைய கடைகள்  இன்று ஏலம்

வேலூர், ஏப்.26- வேலூர் புதிய பேருந்து நிலை யத்தில் அதிக வாடகை மற்றும் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால் புதிய பேருந்து நிலையத்தில் கடைகள் ஏலம் விடாமல் பலமுறை ஒத்தி வைக்கப் பட்டது. இதற்கிடையே புதிய பேருந்து நிலைய கடைகள் ஏலம் வியாழக்கி ழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு ள்ளது. வேலூர் மாநகராட்சி அலுவல கத்தில் புதனன்று கடைகள் ஏலம் தொட ர்பான விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டன. மாநகராட்சி விதியில் கூறியுள்ளபடி வைப்புத் தொகை மற்றும் முன்பணம் செலுத்த அறிவுறுத்தினர். புதிய பேருந்து நிலையத்தில் சிறு வியாபாரிகள் அமர்ந்து தண்ணீர், குளிர்பானம், பிஸ்கட், தின்பண்டங்கள் விற்பனை செய்து வருகின்றனர். பண்டிகை விடுமுறை மற்றும் வார விடுமுறை நாட்களில், வியாபாரிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பெண்கள் மற்றும் முதியோர்கள் உட்பட பயணிகள் பேருந்து நிலையத்தில் இருந்து வெளியே வந்து பொருட்களை  வாங்க முடியவில்லை. இதனால் அதிக அளவு விலை கொடுத்து பொருட்களை வாங்கும் நிலை உள்ளது. இதனால் பயணிகள் அவதிப்படுகின்றனர். எனவே கடைகளை விரைந்து திறக்கவும், புதிய பேருந்து நிலைய வளாகத்தில் ஏடிஎம்.களை அமைக்க பயணிகள் வலி யுறுத்தி உள்ளனர்.

கள்ளச்சாராயம் பறிமுதல்

கள்ளக்குறிச்சி,ஏப்.26- கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அம லாக்க பிரிவு காவல்துறையினர் கச்சிராய ப்பாளையம் அருகே மட்டப்பாறை சோதனைச் சாவடியில் வாகன சோதனை ஈடுபட்டனர். அப்போது போலீசாரை கண்டதும் 2 மோட்டார் மோட்டார் சைக்கி ளில் வந்தவர்கள் வாகனத்தை கீழே போட்டுவிட்டு தப்பி ஓடினர். அப்போது போலீசார் வாகனத்தை சோதனை செய்த போது லாரி ட்யூபில் சுமார் 180  லிட்டர் கள்ளச்சாரயத்தை கடத்தி வந்தது தெரிந்தது. இதனை தொடர்ந்து கள்ள ச்சாராயத்தை போலீசார் சம்பவ இடத்திலேயே அழித்தனர். தொடர்ந்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்த போலீசார் தலைமறைவானவர்களை தேடி வருகின்றனர்.

இளம் பெண்கள் மாயம்-நெருக்கடியில் காவல்துறை

கிருஷ்ணகிரி,ஏப்.26- கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தின்னூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயசீலன். இவரது மகள் மோனி (வயது 22). இவர் கடந்த 22-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் மாயமானார்.  இது குறித்து அவரது தந்தை ஓசூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையை அடுத்த கலுகொண்டஅள்ளி பகுதியைச் சேர்ந்தவர் ஹரீஷ். இவரது மனைவி ரேவதி (வயது24). கணவன்-மனைவிக்கு இடையே குடும்பத்தகராறு காரணமாக ஏப்.23 அன்று வெளியே சென்றவர் மாயமானார். இதுகுறித்து ஹரீஷ் மத்திகிரி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். மற்றொரு சம்பவத்தில், தனியார் நிறுவன பெண் ஊழியர் தருமபுரி மாவட்டம், பாலக்கோடு மாதனஅள்ளி பகுதியைச் சேர்ந்தவர் சின்னசாமி. இவரது மகள் மாதேஸ்வரி (வயது 27). இவர் கடந்த 22-ந் தேதி வேலைக்கு செல்வதற்காக ஹாஸ்டலில் இருந்து வெளியே சென்றவர் பின்னர் மீண்டும் அறைக்கு திரும்பிவரவில்லை. இந்த சம்பவம் குறித்து சின்னசாமி மத்திகிரி காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார். இளம்பெண்கள் தொடர்ந்து மாயமாவது காவல்துறை வட்டாரத்தில் நெருக்கடி ஏற்படுத்தியுள்ளது.

விஐடியில் பி.டெக் பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கை முடிவு  வெளியீடு

 வேலூர், ஏப்.26-  வேலூர் மாவட்டத்தில் உள்ள விஐடி பல்கலைக்கழகத்தில் நடப்பு கல்வி யாண்டில்(2023) பி.டெக் பட்டப் படிப்பில் சேருவதற்கான சேர்க்கை முடிவுகள் (26-4-2023) வெளியிடப்பட்டுள்ளன.   2023 ஆம் கல்வியாண்டில் துபாய், குவைத், மஸ்கட் மற்றும் கத்தார் உள்ளிட்ட வெளிநாடுகளிலும் உள்நாட்டிலும் 121 மையங்களில் இந்த நுழைவுத் தேர்வு கணினி முறையில் மாணவர்கள் தேர்வு எழுதினர். மாணவர்கள் சேர்க்கை முடிவுகளை www.vit.ac.in என்ற இணையதளம் வழியாக தெரிந்து கொள்ளலாம். விஐடி மாணவர்களை ஆன்லைன் கவுன்சிலிங்கில் பங்கேற்க ஊக்குவிக்கிறது மற்றும் சேர்க்கை உறுதி செய்ய அதிகபட்ச வாய்ப்பு களை வழங்குகிறது. விஐடி நுழைவுத் தேர்வில் 1 முதல் 10  வரை ரேங்க் பெற்ற பெற்றவர்களுக்கு  விஐடி யில்  பிடெக் படிப்பின் 4 ஆண்டுகளும் 100 விழுக்காடு படிப்பு கட்டண சலுகையும்,  11 முதல் 50 ரேங்க் பெற்றவர்களுக்கு 75 விழுக்காடு  படிப்பு கட்டண சலுகையும், 51 முதல் 100 ரேங்க் பெற்றவர்களுக்கு 50 விழுக்காடு  படிப்பு கட்டண சலுகையும், 101 முதல் 500 ரேங்க் பெற்றவர்களுக்கு 25 விழுக்காடு  படிப்பு கட்டண சலுகையும் வழங்கப்படுகிறது.தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், மற்றும் மத்திய பிரதேசத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பயின்று +2 தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பெறும் 1 மாணவருக்கும் 1 மாணவிக்கும் விஐடி யில் 100 விழுக்காடு  கல்வி கட்டண சலுகை யும், இலவச விடுதி வசதியும், உணவு வசதியும் விஐடி ஸ்டார்ஸ் திட்டத்தின்கீழ் சேர்க்கை வழங்கப்பட உள்ளது.3 ஆண்டு இளநிலை பட்டப்படிப்புகள் , 4 ஆண்டு இளநிலை பட்டப்படிப்புகள் க்ஷ .ளுஉ.  அக்ரி,  க்ஷ. ஹசஉh, 5 ஆண்டு ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு  விஐடி இணையதளம் www.vit.ac.in வழியாக விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தப்பிச்சென்ற 4 சிறார்களை 48 மணி நேரத்தில் கண்டு பிடித்த ராணிப்பேட்டை காவல்துறையினர்

ராணிப்பேட்டை, ஏப். 26 – ராணிப்பேட்டை மாவட்டம் காரைகூட்ரோடு பகுதியில் சமூக நலத்துறை கட்டுப்பாட்டின் கீழ் சிறுவர்களுக்கான அரசினர் குழந்தைகள் இல்லம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான சிறுவர்கள் தங்கி கல்வி பயின்று வருகின்றனர். இதில் பயின்று வந்த 4 சிறு வர்கள் வெள்ளியன்று  மாலை தப்பித்ததாக கூறப்படுகிறது. காவல் துணை கண்காணிப் பாளர் பிரபு தலைமையில் காவல் உதவி ஆய்வாளர் அண்ணா மலை, மனோகர், மகாராஜன், சிறப்பு உதவி ஆய்வாளர் அண்ணாமலை ஆகியோர் கொண்ட  தனிப்படை சிறுவர் களை தேடிவந்தனர். சந்தேகத்தின் பேரில் அவர்களின் சொந்த ஊர்களில் விசாரணை மேற்கொண்ட போது காட்டு ராஜா, சூர்யா, பூபதி ஆகி யோர் மூவரும் ஆரணி பகுதி யில் உள்ள புலவன்பாடி என்ற இடத்திலும் தினேஷ் என்ற சிறு வனை ஆரணி படவேடுபகுதியில் பிடித்துள்ளனர். 48 மணி நேரத்தில் ராணிப்பேட்டை போலீசார் தீவிர தேடுதலுக்கு பிறகு 4 சிறுவர் களை கண்டுபிடித்தனர். ராணிப் பேட்டை காவல் நிலையத்தில் காவல் துணை கண்காணிப் பாளர் பிரபு நேரில் வந்து உணவுப்பொருட்கள்வாங்கி கொடுத்து அறிவுரை கூறி சிறுவர்களை காப்பகத்தின் கண்காணிப்பாளரிடம்  ஒப்ப டைத்தார்.

பெரணமல்லூர் பேரூராட்சி தலைவரின் ஜனநாயகவிரோத போக்கு: சிபிஎம் கண்டனம்

திருவண்ணாமலை, ஏப்.26- பெரணமல்லூர் பேரூராட்சி மன்றக் கூட்டம் பேரூராட்சித் தலைவர் வேணி ஏழுமலை தலை மையில் நடைபெற்றது. பேரூ ராட்சி துணைத்தலைவர் ஆண்டாள் அண்ணாதுரை முன் னிலை வகித்தார். கூட்டத்தில் வார்டு கவுன்சில ரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் கிளை செயலாளருமான மா.கௌதம்முத்து மக்கள் கோரிக் கைகள் குறித்துப் பேசினார். பேரூராட்சியின் மேல்நீர்த்தேக்கத் தொட்டிகளைத் தூய்மைப் படுத்த வேண்டும், துப்புரவுப் பணி யாளர்களுக்குக் கையுறைகள் வழங்க வேண்டும், குளக்கரை யில் நடப்பட்ட செடிகளுக்குத் தண்ணீர் ஊற்ற வேண்டும், ஏற்கனவே வலியுறுத்தியபடி சாதிப் பெயர்க்களிலுள்ள தெரு க்களின் பெயர்களை நீக்கி வேறு பெயர்கள் வைக்கவேண்டும், சமுதாயக்கூடத்தை மக்கள் பயன் பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும், பேரூராட்சியின் வரவு ,செலவு  வைக்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி  பேசிக் கொண்டிருக்கும்போதே, “நீங்கள் பேசக்கூடாது. வெளி யேறுங்கள்” என பேரூ ராட்சியின் தலைவர் வேணி ஏழுமலை தொடர்ந்து சத்தம் போட்டார். பேரூ ராட்சியின் செயல் அலுவலர் தமிழரசியும் மற்றும் பிற கவுன்சி லர்களும் அமைதி காத்தனர்.  இத்தகைய ஜனநாயக விரோதப் போக்கை மா.கௌதம் முத்து கண்டித்து பேசினார். பேரூராட்சியின் மக்கள் விரோ தப்போக்கை கண்டித்து  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி  சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. இதை யொட்டி பேரூராட்சிகளின் உதவி இயக்குநர், கோரிக்கைகளை நிறைவேற்றிவிட்டு அதன் நகலை சிபிஎம் ஒன்றிய செயலாளர் பெரணமல்லூர் சேகரனுக்கு அனுப்பியுள்ளார். ஆனால் பல மாதங்களாகியும் இதுவரை எந்த கோரிக்கையையும் நிறை வேற்றவில்லை. முறையான பதிலும் தரவில்லை. மன்றக்கூட் டத்தில் மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர் மா. கௌதம்முத்து வையும் பேச அனுமதிப்ப தில்லை. இத்தகைய போக்கு வன்மையாகக் கண்டிக்கத் தக்கது எனவும் கட்சியின் சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் எனவும் ஒன்றிய செயலாளர் ந. சேகரன் தெரிவித்துள்ளார்.

சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்: குண்டர்சட்டத்தில் தாளாளர் கைது

கடலூர்,ஏப்.26-  கடலூர் மாவட்டம் விருத்தாசலம் மேட்டு க்குப்பத்தை சேர்ந்தவர் பக்கிரிசாமி.  இவர் சக்தி நகரில் நர்சரி பள்ளி நடத்தி வருகிறார். மேலும் விருத்தாசலம் நகராட்சி 30-வது வார்டு தி.மு.க. கவுன்சிலராகவும் இருந்தார். இவர் தனது பள்ளியில் படிக்கும் ஐந்து வயது சிறுமியிடம் பாலியல் துன்புறுத்த லில் ஈடுபட்டதாக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. விசார ணைக்குப் பிறகு அவரை போக்சோ சட்டத் தில் போலீசார் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.  பாதிக்கப்பட்ட சிறுமியிடம் விசாரணை நடத்தியதில் பள்ளி தாளாளர் பக்கிரிசாமி கடலை மிட்டாய் வாங்கிக் கொடுத்து பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டது தெரிய வந்தது. கைது நடவடிக்கையைத் தொடர்ந்து அவர் திமுகவில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில், பள்ளி தாளாளர் பக்கிரிசாமி மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. கடலூர் மத்திய சிறையில் இருக்கும் பக்கிரி சாமியை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிர மணியம் உத்தரவு பிறப்பித்தார்.