ஓசூர், ஜூலை 26-
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி 28-வது வார்டுக்குட்பட்ட சென்னத்தூர் பகுதியில், மாநகராட்சியின் நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 33 லட்சத்தில் தார் சாலை அமைக்கப்படுகிறது.
இதையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில், ஓசூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஒய்.பிரகாஷ், மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா ஆகியோர் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தனர்.