districts

img

தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் தர்ணா

மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை அனைத்து பள்ளிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும். இத்திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலம் செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி செவ்வாயன்று (ஆக.30) தமிழகம் முழுவதும் தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் தர்ணா நடத்தினர். இதன் ஒருபகுதியாக சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு சென்னை மாவட்டத் தலைவர் என்.சித்ரகலா தலைமை தாங்கினார். மாநிலச் செயலாளர் எஸ்.கற்பகம், மாவட்டச் செயலாளர் எஸ்.சுந்தரமூர்த்தி, பொருளாளர் கே.அன்னபூரணி, அரசு ஊழியர் சங்க வடசென்னை மாவட்ட நிர்வாகிகள் வி.விஜயகுமரன், எம்.விவேகானந்தன் உள்ளிட்டோர் பேசினர்.


திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு  மாவட்ட தலைவர் தேவ அதிசயம்   தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்  சத்துணவு ஊழியர்  சங்க மாநில துணைத் தலைவர் வாசுகி, மாவட்டச் செயலாளர் பா.மணிகண்டன் அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்ட தலைவர்  ஜி.இளங்கோவன், வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தின்  மாநில துணைத் தலைவர் க.மணிகண்டன், மாவட்ட இணைச் செயலாளர்  மதிவாணன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின்  மாவட்ட செயலாளர் இரா.பாண்டுரங்கன் ஆகியோர் பேசினர். சத்துணவு ஊழியர் சங்கத்தின்  முன்னாள் மாநில தலைவர்  சுந்தரம்மாள் நிறைவுரை ஆற்றினார்.