districts

img

ஆகஸ்ட் 13ஆம் தேதி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில மகளிர் மாநாடு

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில மகளிர் மாநாடு கிருஷ்ணகிரியில் ஆகஸ்ட் 13ஆம் தேதி நடைபெற உள்ளது. மாநாட்டிற்கான நிதியளிப்பு கூட்டமும், இலட்சினை வெளியீடும், முன்னாள் மாவட்டப் பொருளாளர் தேவராஜ் பணி ஓய்வு பாராட்டு விழாவும் மாநிலச் செயலாளர் பரமேஸ்வரி தலைமையில் கிருஷ்ணகிரியில் நடைபெற்றது. மாநிலத் தலைவர் மு.அன்பரசு, பொதுச் செயலாளர் ஆ.செல்வம், துணைப் பொதுச் செயலாளர் வாசுகி, மாநிலச் செயலாளர் செல்வராணி ஆகியோர் மாநாட்டு இலட்சினையை வெளியிட்டனர். இதில் வரவேற்புக் குழு நிதி காப்பாளர் கோவிந்தராஜன், மாவட்டத் தலைவர் பி.சந்திரன், செயலாளர் ஆ.நடராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.