districts

சென்னை முக்கிய செய்திகள்

தமிழக மக்கள் ஒற்றுமை மேடை  காஞ்சிபுரம் மாவட்ட அமைப்பு உதயம்

காஞ்சிபுரம், ஜன.29- தமிழக மக்கள் ஒற்றுமை மேடையின்  மாவட்ட அமைப்பு குழு கூட்டம் காஞ்சி புரத்தில் ஏ.வாசுதேவன் தலைமையில் நடைபெற்றது.  மாநில ஒருங்கிணைப்பாளர் க.உதய குமார் கலந்து கொண்டு உரையாற்றினார். இக்கூட்டத்தில் விசிக, தமிழக வாழ்வுரிமை கட்சி, சிபிஐ(எம்), தமுமுக, மனிதநேய மக்கள் கட்சி, சிஎஸ்ஐ கிறிஸ்தவ அமைப்பு, திருக்குறள் பேரவை, புத்தர் விகாரம் மற்றும் வெகுஜன அமைப்புக்களின் மாவட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.  32 பேர் கொண்ட மாவட்ட அமைப்பின் ஒருங்கிணைப்பாளராக ஏ.வாசுதேவன் தேர்வு செய்யப்பட்டார்.

மாநகரபேருந்து கட்டணத்தை  ஆன்லைனில்  செலுத்தும் வசதி

சென்னை,ஜன.29- சென்னையில் மாநகர  பேருந்துகளில் டிக்கெட்டு களுக்கு ஆன்லைன் மூலம் பணம் செலுத்தும் புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  முதல் முறையாக பல்லா வரம் பேருந்து டெப்போ வில் இந்த நடைமுறை  அமலுக்கு வந்துள்ளது.  இதற்காக பல்லாவரத் தில் உள்ள மாநகரபோக் குவரத்து கழக நடத்துநர்க ளுக்கு, யுபிஐ மற்றும் கார்டு மூலம் டிஜிட்டல் முறை யில் பணம் பெறும் புதிய கையடக்க கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த திட்டம் படிப்படியாக சென்னையில் உள்ள மற்ற டெப்போக்களுக்கும் விரிவுபடுத்தப்பட வாய்ப் புள்ளது என்று மாநகர போக் குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆட்டோ சங்க மதுரவாயல் கிழக்கு பகுதி மாநாடு

சென்னை, ஜன. 29 - ஆட்டோ டாக்சி ஓட்டுநர் சங்கத்தின் மதுரவாயல் கிழக்கு  பகுதி 16வது மாநாடு சனிக்கிழமையன்று  காரம்பாக்கத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் சிஐடியு மாநிலச் செயலாளர் கே.சி.கோபிகுமார், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.சரவணசெல்வி, சங்கத்தின் தென்சென்னை மாவட்டத் தலைவர் முகமது அனிபா, பொதுச்செயலாளர் இ.உமாபதி, பகுதி தலைவர்  ஜி.ராஜேந்திரன், செயலாளர் ஜி.பார்த்தசாரதி, பொருளாளர்  சி.முருகன் உள்ளிட்டோர் பேசினர். புதிய நிர்வாகிகள் பகுதி தலைவராக ஜி.ராஜேந்திரன், செயலாளராக ஜி.பார்த்தசாரதி, பொருளாளராக சி.முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

அரசு பள்ளிக்கு செல்லும்  பாதை தடுப்பு: மாணவர்கள் அவதி

கிருஷ்ணகிரி,ஜன.29- கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டத்தில் உள்ள மத்தூர் பகுதியில் உள்ளது ஒட்டப்பட்டி ஊராட்சி மன்றம். இங்குள்ள மாதம் பதி கிராமத்தில் நிலம் குறித்து இரு தரப்பினருக்கு பிரச்சினை உள்ளது. இதையடுத்து, அரசு ஒன்றிய நடுநிலை பள்ளிக்கு செல்லும் சாலை நிலம் தனக்கு சொந்தமானது என்று மகேந்திரன் என்பவர் கற்களை கொட்டியும் தென்னை மரங்களை வெட்டிப் போட்டும் மறித்துள்ளார். இதுகுறித்து பொதுமக்கள் கடந்த 20 ஆம் தேதி மத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால், காவல்துறையினர் கண்டுகொள்ள வில்லை என்று கூறப்படுகிறது. எனவே, மாவட்ட ஆட்சியர் மற்றும்  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் தலையிட்டு மகேந்திரன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மறித்துள்ள சாலையைமீண்டும்  பொது பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்றும் கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

புதுவையில் வேளாண் துறையின்  காய்கறி, மலர் கண்காட்சி

புதுச்சேரி, ஜன.29- புதுச்சேரி வேளாண் துறை சார்பில் காய்கறி மலர் கண்காட்சி மூன்று நாட்கள் நடைபெறுகிறது. இதுகுறித்து புதுச்சேரி வேளாண்துறை அமைச்சர் தேனீ. ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில்,“ஒவ்வொரு ஆண்டும் மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 34 வது காய் கனி, மலர் கண்காட்சி வருகிற 9 ஆம் தேதி தொடங்கி 11 ஆம் தேதி வரை தாவரவியல் பூங்காவில் நடைபெறுகிறது”என்றார். இக்கண்காட்சியில் குறைந்த விலைக்கு காய்கறி மலர் செடிகள் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படும். கண்காட்சியில் ஒரு பகுதியாக  விவசாயிகள், பொதுமக்கள்,மாணவர்கள்,இயற்கை ஆர்வலர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், தோட்டக்கலை ஆர்வலர்களின் படைப்புகள் காட்சிப்படுத்தப்பட உள்ளது என்றும் அமைச்சர் கூறினார். பரிசு போட்டி வீடுகளில் மாடி தோட்டம் அமைத்தல், காய்கறி தோட்டம்,பழ வகைகள் ,மூலிகை செடிகள், அலங்கார தோட்டம் அமைக்கும் முறை குறித்து ஆலோசனைகள் வழங்கப்படும். கண்காட்சியில் பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

யானை தாக்கி விவசாயி சாவு: அதிகாரிகள் முற்றுகை

கிருஷ்ணகிரி,ஜன.29-  கிருஷ்ணகிரி மகராஜகடை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சாம்பசிவம். அவருக்கு வயது 55. ஆந்திர மாநில வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த யானை தாக்கியதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.  இந்த தகவல் அறிந்து வந்த காவல் மற்றும் வனத்துறையினரை கிராம மக்கள் முற்றுகையிட்டனர். அப்போது, கடந்த சில நாட்களாக இந்தப் பகுதியில் யானையின் நடமாட்டம் குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தும் எச்சரிக்கை நடவடிக்கை, யானையை விரட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை. மெத்தனமாக இருந்தனர் என்றும் குற்றம்சாட்டினர். மேலும் பலியான விவசாயி குடும்பத்திற்கு ரூ. 20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

ஹாங்காங், மொரீஷியசுக்கு நேரடி விமான சேவை

சென்னை, ஜன.29- சென்னை பன்னாட்டு விமான நிலை யத்திலிருந்து ஹாங்காங்கிற்கு ‘கேத்தே’ பசிபிக் ஏர்லைன்ஸ் என்ற நிறுவனம் நேரடி விமானத்தை இயக்கி வந்தது.  கடந்த 2020-மார்சில் உலகம் முழுவதும் கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. கொரோனா தொற்று பாதிப்பு முடிந்து சகஜநிலை திரும்பியபின் சென்னையில் இருந்து பல நகரங்களுக்கு நேரடி விமானங்கள் இயக்கப்பட்டன. ஆனால் சென்னை -ஹாங்காங் இடையே நேரடி விமான சேவை மீண்டும் தொடங்கப்படா மல் இருந்து வந்தது. இந்நிலையில் , 4 ஆண்டுகளுக்கு பின் வரும் பிப்ரவரி 2- ஆம் தேதியில் இருந்து ‘கேத்தே’பசிபிக் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம், மீண்டும் சென்னை- ஹாங்காங் இடையே நேரடி விமான சேவையை தொடங்குகிறது. இந்த விமானம் வாரத்தில் 3 நாட்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  நிறுத்தி வைக்கபட்ட சென்னை - ஹாங்காங் நேரடி விமான சேவை, 4 ஆண்டுகளுக்குப் பின்பு மீண்டும் தொடங்கப்படுவது தொழில் துறையினருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சென்னையிலிருந்து ஜப்பான், தென்கொரியா, பிரிட்டன் ஆகிய நாடுக ளுக்கு செல்லும் பயணிகளுக்கு இது இணைப்பு விமானமாக இருக்கும். அதே போல, சென்னை-மொரீஷியஸ் இடையே ‘ஏர் மொரீஷியஸ்’ ஏர்லைன்ஸ் விமான சேவை வரும் ஏப்ரலில் மீண்டும் தொடங்கப்பட உள்ளதாக சென்னை விமானநிலைய அதிகாரிகள் தெரி வித்துள்ளனர்.

கேலோ இந்தியா வாலிபால்: தமிழ்நாட்டிற்கு தங்கம்

கேலோ இந்தியா இளைஞர் விளை யாட்டு போட்டியில் ஆண்களுக்கான வாலி பால் இறுதி ஆட்டம் திங்களன்று (ஜன.29) நடைபெற்றது. இதில் தமிழ்நாடும் ஹரியா னாவும் தங்கத்திற்கு பலப்பரீட்சை நடத்தின. தமிழ்நாடு அணி வெற்றி பதக்கத்தை வென்றது. கடந்த 2018 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் தமிழ்நாடு அணி தங்கப் பதக்கம் வென்றது.  பெண்கள் பிரிவில் நடைபெற்ற வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் தமிழ்நாடு அணி, குஜராத்தை வீழ்த்தி பதக்கம் வென்றது.கேலோ இந்தியா இளை ஞர் விளையாட்டு வரலாற்றில் தமிழ்நாடு மகளிர் அணி பதக்கம் வெல்வது இது 3-வது முறையாகும். இதற்கு முன்பு கேலோ இந்தியா விளையாட்டின் 4-வது பதிப்பில் தங்கப் பதக்கமும், 5-வது பதிப்பில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழ்நாடு பெண்கள் அணியினர், 3-வது முறையாக பதக்கம் வென்றுள்ளனர். நீச்சலில் தங்கம் நீச்சலில் பெண்களுக்கான 100 மீட்டர் பேக்ஸ்டி ரோக் பிரிவில்  தீக்சா சிவ குமார் தங்கப் பதக்கம் வென்றார். ஆண்களுக்கான இதே பிரிவில் நித்திக் நாதெள்ளா வெள்ளிப் பதக்கம் வென்றார். 200 மீட்டரில் நிதி வெண்கலப் பதக்கமும் வென்று கொடுத்தார். பளுதூக்குதல் ஆண்களுக்கான 89 கிலோ எடைப் பிரிவில் தமிழ்நாட்டின் தீர்ஷான், சாலையோர சைக்கிள் பந்த யத்தில் எஸ்.நிதின் ஆகியோர் வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார். பதக்கப்பட்டியலில் 44 தங்கம், 39 வெள்ளி, 44 வெண்கலம் உட்பட 127 பதக்கங்களு டன் மகாராஷ்டிரா தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. 29 தங்கம், 19 வெள்ளி, 34 வெண்கலம் உட்பட 82 பதக்கங்களை வென்றுள்ள தமிழ்நாடு மீண்டும் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. குத்துச் சண்டை, மல்யுத்தப் போட்டியில் அதிரடியாக பதக்கங்களை குவித்த ஹரி யானா 33 தங்கம், 20 வெள்ளி, 42 வெண்கலத்து டன் ஒரு இடம் முன்னேறி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. ராஜஸ்தான், பஞ்சாப்,கேரளா,தெலுங்கானா,தில்லி மாநிலங்கள் தலா 10 தங்கப் பதக்கங்களை வென்று அடுத்தடுத்த இடங்களில் உள்ளது.