தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக மாணவர்களின் கலந்தாய்வு வகுப்பு திருவண்ணாமலை அருகே உள்ள அருண வித்யா கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் எஸ்.ஆறுமுகம் வழிகாட்டுதலின் பேரில் நடைபெற்ற இந்த கலந்தாய்வு வகுப்பில், கல்லூரி தாளாளர் சம்பத்குமார், முதல்வர் ஹேமாவதி, ஒருங்கிணைப்பாளர் செந்தில்நாதன், பல்கலைக்கழக தொடர்பு அலுவலர் ரவி உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.