காலை சிற்றுண்டி உணவு திட்டத்தை அனைத்து பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தி சத்துணவு ஊழியர்கள் மூலம் வழங்க வேண்டும், தேர்தல் கால வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் கிருபாகரன் தலைமையில் விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டச் செயலாளர் தேசிங்கு, பொருளாளர் சத்யா, மாநில துணைத் தலைவர் ஜெயந்தி, மாநில செயற்குழு உறுப்பினர் ஜானகி தேவி, அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் சரவணன், மாவட்டச் செயலாளர் சிவக்குமார், சிஐடியு மாவட்டச் செயலாளர் மூர்த்தி, மருத்துவத் துறை நிர்வாக அலுவலர் சங்கத்தின் மாநிலப் பொருளாளர் அசோகன் ஆகியோர் பேசினர்.