இப்தார் எனும் மத நல்லிணக்க நோன்பு திறப்பு நிகழ்ச்சி வியாழனன்று (ஏப்.20) சைதாப்பேட்டையில் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் நடைபெற்றது. நலக்குழுவின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஒய்.இஸ்மாயில் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் காயிதே மில்லத் கல்லூரியின் தாளாளர் தாவூத் மியான் கான், நலக்குழுவின் பொதுச் செயலாளர் எம்.ராமகிருஷ்ணன், துணைத்தலைவர் வி.கல்யாணசுந்தரம், மாவட்ட பொருளாளர் கே.மணிகண்டன், சமூக செயற்பாட்டாளர் க.பீம்ராவ், மௌலவி அல்-ஹஃபிழ் கே.முகமது ஷப்பீர் அலி, ஹாஜி ரஹமத்துல்லா பாதிரியார் செல்வின் துரை உள்ளிட்டோர் பேசினர்.