புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளியன்று (பிப்.10) மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் கோரிக்கை பேரணி நடத்தினர். அதன் ஒருபகுதியாக வடசென்னை, தென்சென்னை மாவட்டங்கள் சார்பில் சிந்தாதிரிப்பேட்டையில் பேரணி நடைபெற்றது. பேரணியை அகில இந்திய கணக்குத் தணிக்கை துறை ஊழியர் சங்கத் தலைவர் கே.ரமேஷ் தொடங்கி வைத்தார். சங்கத்தின் பொதுச்செயலாளர் ஆ.செல்வம் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.