தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் 10ஆவது ஆண்டு அமைப்பு தினம் வெள்ளியன்று (பிப்.3) கொண்டாடப்பட்டது. இதனையொட்டி சென்னை மாவட்டம் சார்பில் திருவல்லிக்கேணியில் நடைபெற்ற கொடியேற்று விழா, கருத்தரங்கில் தட்சிண ரயில்வே ஓய்வூதியர் சங்கத்தின்தலைவர் ஆர்.இளங்கோவன் பேசினார். மாவட்டத் தலைவர் பி.எஸ்.அப்பர் தலைமையில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் மாநிலச் செயலாளர்கள் ம.நாதன், பி.மகேஸ்வரி, மாவட்டச் செயலாளர் என்.ராமசாமி, துணைத்தலைவர் எஸ்.ஏ.முபாரக் பாட்ஷா உள்ளிட்டோர் பேசினர்.