தாம்பரம், ஜூன் 2- தாம்பரம் மாநகராட்சி யின் 3வது மண்டல குழு கூட்டம் செம்பாக்கம் மண்டல அலுவலகத்தில் மண்டல தலைவர் ஜெயபிரதீப் சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் மொத்தமுள்ள 14 மாமன்ற உறுப்பினர்களில் சுயேச்சையாக போட்டி யிட்டு வெற்றி பெற்ற மாமன்ற உறுப்பினர் கிருஷ்ண மூர்த்தி, கிரிஜா சந்திரன், அதி முகவை சேர்ந்த மாமன்ற உறுப்பினர் சுபாஷினி, திமு கவை சேர்ந்த மாமன்ற உறுப்பினர் ஜெகன் ஆகியோர் மட்டுமே கூட்டத்தில் கலந்துகொண்ட னர். கூட்டத்தில் 6 திமுக மாமன்ற உறுப்பினர்கள், 2 சுயேச்சை உறுப்பினர்கள், ஒரு காங்கிரஸ் உறுப்பினர் என 9 பேர் கூட்டத்தை புறக் கணித்தனர். இருப்பினும், மண்டலக்குழு தலைவ ருடன் சேர்த்து 5 பேர் கலந்து கொண்டதை பெரும் பான்மையாக வைத்து சாலை பராமரிப்பு உட்பட 8 தீர்மானங்கள் மண்டல குழு கூட்டத்தில் நிறைவேற்றப் பட்டதாக மண்டல குழு தலைவர் தெரிவித்தார்.