எஸ்.கே.பி பொறியியல் கல்லூரியில் போதைப் பொருளுக்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் பாஸ்கரன்,துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். உடற்கல்வி இயக்குநர் செந்தில் உறுதிமொழி வாசிக்க அனைவரும் உறுதிமொழி ஏற்றனர். இந்நிகழ்ச்சிக்கு எஸ்.கே.பி கல்வி குழுமத்தின் தலைவர் கருணாநிதி தலைமை வகித்தார். கல்விக் குழுமத்தின் இணை செயலாளர் அரங்கசாமி மற்றும் முதன்மை நிர்வாக அதிகாரி முனைவர் சக்தி கிருஷ்ணன், மக்கள் தொடர்பு அலுவலர் சையது ஜகிருத்தீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.