கள்ளக்குறிச்சி, மே 28-
தமிழ்நாடு அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்று உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளுக்கு அமைச்சர் எ.வ.வேலு வேண்டுகோள் விடுத்தார்.
கள்ளக்குறிச்சியில் மாவட்ட ஆட்சி யர் அலுவலக கூட்ட அரங்கில், தமிழ்நாடு அரசின் “ஈடில்லா ஆட்சி ஈராண்டே சாட்சி” சாதனை மலர் வெளி யீட்டு விழா நடைபெற்றது. ஆட்சியர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கினார்.
சட்டமன்ற உறுப்பினர்கள் வசந்தம் கார்த்திகேயன், உதய சூரியன், மணிக்கண்ணன் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட வருவாய் அலுவலர் சத்திய நாராயணன் வரவேற்றார். மக்களவை உறுப்பினர் ரவிக்குமார் தொடக்க உரையாற்றினார்.
சாதனை மலரை வெளியிட்டு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு பேசுகையில், “ இம் மாவட்டத்தில் நடைபெற்ற பணிகளை புத்தகத்தின் மூலம் வெளி யிட்டுள்ளோம். உள்ளாட்சி பிரதிநிகள் இந்த சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்” என்றார்.
மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பி னர் புவனேஸ்வரி பெருமாள், ஒன்றி யக் குழு தலைவர் அலமேலு ஆறு முகம், தாமோதரன், நகர மன்ற தலைவர் சுப்பராயலு, பேரூராட்சி மன்றத் தலைவர் வீராசாமி,மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் செல்வி உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் பலரும் கலந்து கொண்டனர்.