districts

img

விவசாயிகளை தாக்கிய வேளாண் அலுவலர் மீது நடவடிக்கை எடுத்திடுக

திருவண்ணாமலை, மார்ச் 20- திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி தாலுகா மீசநல்லூர் விவசாயிகள் தெள்ளாறு வேளாண்மை விரிவாக்க மையத்தில் உளுந்து விதை  பணம் கொடுத்து வாங்கி விட்டு, அதற்கான ரசீது கேட்டுள்ளனர்.   ரசீது கேட்ட விவசாயி கள் மீது வேளாண் துறை  அதிகாரி கொலைவெறி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.  விவசாயிகளை அவமதித்து தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் வந்தவாசி வட்டக்குழு சார்பில் புதனன்று (மார்ச் 20)  தெள்ளாற்றில் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டது. இதையொட்டி மாவட்ட வேளாண் துணை இயக்கு நர் சுந்தரம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் உதவி இயக்குநர் சந்தி ரன், வேளாண் அலுவலர்  குமரன் ஆகியோரும், விவ சாயிகள் சார்பில் திரு வண்ணாமலை மாவட்டத் தலைவர் டி.கே. வெங்கடேசன், நிர்வாகி கள் அ.உதயகுமார், ராதா கிருஷ்ணன், ஜா.வே.சிவராமன், ச.தங்கமணி, ப.விசுவநாதன், சந்தோஷ் குமார், செ. குப்புசாமி, கோவிந்தராஜன், சங்க நிர்வாகிகள் ஏ.குமார், கே.விஜயா, ராமச்சந்திரன், கரும்பு சங்க நிர்வாகிகள் கி.பால்ராஜ், ர.தீபநாதன் ஆகியோரும் பங்கேற்றனர். கூட்டத்தில் விவசாயி களை தாக்கிய கிடங்கு மேலாளர் மற்றும் ஓட்டுநர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, நடவடிக்கை எடுக்க வேளாண் இணை இயக்குநருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது, விவசாயிகள் வாங்கும் விதை மற்றும் இடுபொருட் களுக்கு உரிய ரசீது வழங்கு வது உறுதி செய்யப்படும் என்றும் வேளாண் அலுவ லர்கள் எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்ததை தொடர்ந்து ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக் கப்படுவதாக விவசாயிகள் சங்க நிர்வாகிகள் தெரிவித்த னர்.