districts

img

கலாநிதி வீராசாமியை ஆதரித்து டி.ராஜா தேர்தல் பிரச்சாரம்

வடசென்னை மக்களவைத் தொகுதியில்  போட்டியிடும் திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து சிபிஐ சார்பில் பெரம்பூரில் மாவட்டச் செயலாளர் தா.கு.வெங்கடேஷ் வேம்புலி தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அகில இந்திய பொதுச் செயலாளர் டி.ராஜா, மாநில துணைச் செயலாளர் மு.வீரபாண்டியன், திமுக சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.சேகர், சிபிஐ முன்னாள் மாவட்டச் செயலாளர் எம்.எஸ்.மூர்த்தி, காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஜெ.டில்லிபாபு, மதிமுக மாவட்டச் செயலாளர் சு.ஜீவன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் பேசினர்.