districts

img

சென்னையில் ஸ்விகி ஊழியர்கள் 2 வது நாளாக வேலை நிறுத்தம்

சென்னை,செப்.20-  ஊக்கத்தொகை வெட்டு மற்றும் 16 மணி நேரம் வேலை முறையை ரத்து செய்யக்கோரி ஸ்விகி ஊழியர்கள் சென்னையில் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள னர். ஸ்விகியில் ஏற்கனவே இருந்த வேலை நேரப்படி 12 மணி நேரம் வேலை செய்தால் வாரம் ரூ.14500 வரை சம்பளமாக கொடுக்கப் பட்டது. ஆனால் புதிய நடைமுறைப்படி தற்போது 16 மணி நேரம் வேலை செய்தால் கூட ரூ12000 ஆயிரம் தான் பெற முடிகிறது. இதில் ஊழி யர்களுக்கான பெட்ரோல் செலவு, உணவு வாகன செலவு போக 7 ஆயிரம் ரூபாய் மட்டுமே சம்பளமாக கிடைக்கும் என்று தெரிவித்தனர். இந்நிலையில் புதிய விதிகளின் படி எவ்வளவு வேலை பார்த்தாலும் குறிப்பிட்ட அளவு மட்டுமே சம்பளம் வழங்கபட உள்ள தாகவும், மேலும் பழைய நடைமுறையின்படி ஊக்க தொகை மற்றும் சம்ப ளத்தை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். சென்னையில் ஸ்விகி உணவு விநியோகம் செய்யும் பகுதிகள் மண்ட லங்களாக பிரிக்கப்பட்டுள்ள தாகவும் குறிப்பிட்ட மண்ட லங்களில் இந்த புதிய நடை முறை அமலுக்கு வந்துள்ள தாகவும் அவர்கள் தெரி வித்தனர். மீதமுள்ள மண்ட லங்களிலும் புதிய சம்பள நடைமுறையை கொண்டு வருவார்கள் என வும் அவர்கள்  தெரிவித்த னர். தற்போது நடை முறைப்படுத்தப்பட்ட புதிய விதிமுறைகளின் படி தங்களுக்கு பணிச்சுமை அதிகரிப்பதாகவும், வருமானம் குறைவதாகவும் வருத்தம் தெரிவித்தனர். முன்பு வழங்கப்பட்டது போலவே வார ஊக்கத் தொகையை வழங்கும் வரை தாங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவ தாகவும் அவர்கள் தெரி வித்துள்ளனர்.

;