districts

img

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை நிறுத்தம் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

திருவண்ணாமலை, செப்.12-  திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏராள மான மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித் தொகை நிறுத்தப்பட்டது. நிறுத்தப் பட்டுள்ள உதவி தொகையை வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தும், பல மாதங்க ளாக உதவித்தொகை வழங்கப்படாமல் உள்ளது.  இந்த நிலையில், உதவித் தொகையை வழங்க உடனடியாக கோரியும், உதவித் தொகை வழங்குவதற்கு உரிய நட வடிக்கை எடுக்காத, மாவட்ட மாற்றுத்திற னாளிகள் நல அலுவலக ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலி யுறுத்தியும், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் முன்பு செவ்வாயன்று (செப்.12) முற்றுகை போராட்டம் நடை பெற்றது. சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் ரமேஷ் பாபு, சிவாஜி, சத்யா, சங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.