செங்கல்பட்டு, மார்ச் 8 - செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியம், ஆலப்பாக்கம் ஊராட்சி, வேண்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி யில் பள்ளிக்கல்வித்துறை யின் சார்பில் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்ப் போம் எதிர்காலத்தை வளமாக்குவோம் என்ற திட்டத்தின் கீழ் மார்ச் 1ஆம் தேதி முதல் அரசு பள்ளி களில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் ச.அருண் ராஜ், நேரில் சென்று பார்வை யிட்டு குழந்தைகளை வரவேற்றார். உடன் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கற்பகம், ஆலப்பாக்கம் வனக்குழு தலைவர் வி.ஜி. திருமலை, மாவட்ட கல்வி அலுவலர்கள், பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.