சென்னை பிப். 14- நாகர்கோவிலைச் சேர்ந்த 57 வயதான சாந்தி ஹென்றி என்ற பெண்ணுக்கு 3 ஆண்டு களுக்கு முன் திடீரென கழுத்து ஒரு பக்கமாக இழுத்துக் கொண்டதோடு அவரால் சாப்பிடவோ அல்லது பேசவோ முடியாமல் போனது. மேலும் அவரது வலது கை செயல்பாடு இல்லாமல் விரைப்பாக மாறியது. இந்த நிலையில் மேலும் அவரது உடலின் பல்வேறு உறுப்புகளும் அசைவற்ற நிலைக்கு சென்றன. இதன் காரணமாக அவர் மிகவும் கடுமையாக அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் அவர் படுத்த படுக்கை யானார். இந்த நிலையில் ரேலா மருத்துவ மனைக்கு வந்து சிறப்பு மருத்துவர்களை சந்தித்தார். அங்கு நரம்பியல் சிகிச்சை நிபுணர் டாக்டர் சங்கர் பாலகிருஷ்ணன், அறுவை சிகிச்சை பிரிவு மூத்த ஆலோசகர் டாக்டர் அன்பு செல்வம், பேச்சு மற்றும் விழுங்குதல் நோயியல் நிபுணரும் நரம்பியல் உடலியக்க நிபுணருமான ஸ்ரீமதி நரசிம்மன் ஆகியோர் நோயாளியை பரிசோதித்னர். முழுமையான ஸ்கேன் மற்றும் மரபணு சோதனைக்குப் பிறகு அவருக்கு டிஸ்டோனியா என்னும் நரம்பு சம்பந்தமான நோய் இருப்பது கண்டறியப் பட்டது.
இது ஒரு பொதுவான அரிய வகை மரபணு நோய் ஆகும் இது உலகில் லட்சத்தில் 16 பேரை மட்டுமே பாதிக்கிறது. இது குறித்து டாக்டர் சங்கர் பால கிருஷ்ணன் கூறுகையில். டிஸ்டோனியா என்பது மிகவும் சிக்கலான உடல் இயக்க பிரச்சினை சார்ந்த நோயாகும். மூளையின் ஒரு பகுதியின் அசாதாரண செயல்பாட்டின் விளைவாக டிஸ்டோனியா ஏற்படுகிறது என்றார். டாக்டர் அன்பு செல்வம் கூறுகை யில், முதலில் நோயாளிக்கு கழுத்து தசைகளுக்கு ஊசி போடப்பட்டது. ஏனெனில் அவருக்கு கொடுக்கப்பட்ட மருந்து களை அவரது உடல் ஏற்றுக் கொள்ள வில்லை. ஊசி செலுத்தப்பட்டதன் மூலம் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிறப்பு மருத்துவர்கள் குழு அவரது மூளை செயல்பாட்டை தூண்டு வதற்கான சிகிச்சையை அளித்தது. அறுவை சிகிச்சை முடிந்து 2 நாட்களுக்கு பிறகு நோயாளிக்கு கழுத்து பகுதியில் தசைகள் இழுப்பது வெகுவாக குறைந்து இருந்தது கண்டறியப்பட்டது. நியூரோஸ்டி முலேட்டரின் புரோகிராமிங் முடிந்ததும் சாந்தியின் வாழ்க்கை நிலை வெகுவாக மேம்படும் என்று நாங்கள் நம்புகிறோம் என்றார் டாக்டர் சங்கர் பாலகிருஷ்ணன்.