districts

img

அரசு பள்ளிக்கு பொருட்கள் வழங்கல்

சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டலம் 4ஆவது வட்டத்தில் உள்ள சென்னை மாநகராட்சி உயர்நிலைப் பள்ளிக்கு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு) சார்பில் 4 மின் விசிறிகள் வழங்கப்பட்டன. மின் விசிறிகளை 4ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெயராமன் பள்ளியின் தலைமை ஆசிரியர் சந்திரலேகாவிடம் வழங்கினார். இதில் மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.வெங்கட்டையா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளர் ஆறுமுகம், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் ராம்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.